மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் (ஆங்கிலம்: Malaysian Houses of Parliament; மலாய்: Bangunan Parlimen Malaysia) என்பது மலேசிய நாடாளுமன்றம் கூடும் கட்டிட வளாகமாகும். இந்தக் கட்டிடம் கோலாலம்பூர், பெர்தானா தாவரவியல் பூங்காவில், மலேசியத் தேசிய நினைவுச் சின்னத்திற்கு அருகில் அமைந்துள்ளது. பொதுகட்டிட வளாகம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒரு பகுதி 3-அடுக்கு பிரதான கட்டிடம்; மற்றும் ஒரு பகுதி 17-அடுக்கு 77-மீட்டர் உயரமான கோபுரம். பிரதான கட்டிடம் மக்களவை; மற்றும் மேலவை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மக்களவையினரின் அலுவலகங்கள் கட்டிடக் கோபுரத்தில் அமைந்துள்ளன. மத்திய அரசு கோலாலம்பூரில் இருந்த காலத்தில் இந்த வளாகம் கட்டப்பட்டது. 1990-களின் பிற்பகுதியிலிருந்து அரசாங்கத்தின் பெரும்பான்மையான நடவடிக்கைகள் புத்ராஜெயாவிற்கு நகர்ந்தாலும், கோலாலம்பூரின் நாடாளுமன்ற மாளிகையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கட்டுமானம்மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான், 1959 டிசம்பரில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்ட பரிந்துரைத்தார். கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு RM 18 மில்லியன் செலவானது. செப்டம்பர் 1962-இல் கட்டுமானம் தொடங்கியது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா; மலேசியாவின் மூன்றாவது மலேசியப் பேரரசர் துவாங்கு சையத் புத்ரா இப்னி அல்மர்கூம் சையத் அசன் ஜமாலுல்லைல் அவர்களால், 21 நவம்பர் 1963 அன்று நடைபெற்றது.[2][3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia