சமரதுங்கன்

சமரதுங்கன்
Samaratungga
Srī Mahārāja Samaratungga
Srī Mahārāja Samaragrawira
போரோபுதூர்
சமரதுங்கன் காலத்தில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய பௌத்த ஆலயம்
சிறீவிஜயம்மாதரம் இராச்சியம்
9-ஆவது அரசர்
ஆட்சிக்காலம்812—833
முன்னையவர்தரணிந்திரன்
பின்னையவர்தாரா தருமசேது
ராக்காய் பிக்கத்தான்
(கணவன் மனைவி)
பிறப்புMedang Jawa Dwipa
துணைவர்
குழந்தைகளின்
பெயர்கள்
மரபுசைலேந்திர வம்சம்
தந்தைதரணிந்திரன்
மதம்பௌத்தம்
சிறீவிஜய அரசர்கள்
தொடக்கம்
பலெம்பாங்
ஜெயநேசன் 671–702
இந்திரவருமன் 702–728
உருத்திர விக்கிரமன் 728–742
(தகவல் இல்லை) 742–775
பிற்காலம்
சைலேந்திர மரபு
(மாதரம் இராச்சியம்)
பனங்கரன் 746–784
பனராபன் 784–803
ஜாவா
பானு 752–775
தருமசேது (விஷ்ணு) 775–?
தரணிந்திரன் 775–782
சமரகரவீரன் 800–819
ராக்காய் வாராக் 803–827
தயா குலா 827–829
ராக்காய் காருங் 829–847
பிரமோதவர்தனி 847–856
ராக்காய் பிக்கத்தான் 838–850
லோகபாலா 855–885
தகவாசன் 885–885
பனுவங்க தேவேந்திரன் 885–887
தயா பத்திரன் 887–887
உதயாத்தியன் 960–980
இசியா சி 980–988
சூடாமணி வருமதேவன் 988–1008
விஜயோத்துங்கவருமன் 1008–1017
கடாரம்
சங்கராமன் 1017–1030
செரி தேவன் 1028–(?)
சோழர் ஆட்சி
இராசேந்திர சோழன் 1025–1044
குலோத்துங்கன் 1070–1120
மௌலி மரபு
திரிலோகிய ராஜா 1183–(?)

சமரதுங்கன் அல்லது மகாராஜா சமரதுங்கன் (ஆங்கிலம்: Samaratungga; இந்தோனேசியம்: Srī Mahārāja Samaratungga; ஜாவானியம்: Srī Mahārāja Samaragrawira) என்பவர் மத்திய ஜாவாவில், கலிங்க இராச்சியத்தின் சைலேந்திர வம்ச வழித்தோன்றல்களில், கிபி 812 முதல் கிபி 833 வரை சிறீவிஜய பேரரசை ஆட்சி செய்த அரசர் ஆவார்.

அத்துடன் இவர், அந்தக் காலக்கட்டத்தில் (8-ஆம் - 9-ஆம் நூற்றாண்டுகள்) சிறீவிஜயத்தை ஆட்சி செய்த மாதரம் இராச்சியத்தின்; சைலேந்திர வம்சத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

தன் முன்னோடிகளைப் போல விரிவாக்கத்தில் தீவிர ஈடுபாடுகளைக் காட்டாமல்; தம் ஆட்சிக் காலத்தில், மதம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கியுள்ளார். மன்னர் தரணிந்திரனின் வாரிசான இவரின் பெயர், 824-ஆம் ஆண்டு காராங்தெங்கா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]:92

வரலாறு

கிபி 824-ஆம் ஆண்டு, காராங்தெங்கா கல்வெட்டின் (Karangtengah inscription) பதிவுகளின்படி,[2] மத்திய ஜாவா மெண்டுட் கோயில் அல்லது மத்திய ஜாவா நிங்காவென் கோயிலுடன் தொடர்புடைய வேணுவன கோயிலின் (Venuvana temple) கட்டுமானத்திற்கும் பொறுப்பேற்றார்.

உலகின் மிகப்பெரிய பௌத்த ஆலயமாகக் கருதப்படும் போரோபுதூர் ஆலயம் கட்டப்படுவதற்கு முன்னோடியாக இருந்த சமரதுங்கன், மத்திய ஜாவா பாவோன் கோயிலின் சீரமைப்பிற்கும் பொறுப்பேற்று இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.

போரோபுதூர்

அவரின் ஆட்சிக் காலத்தின் போது, பௌத்த நினைவுச் சின்னமான போரோபுதூர் கட்டுமானத்தைத் தொடங்கினார்.[3] இருப்பினும் இவர் காலத்தில் போரோபுதூர் கட்டி முடிக்கப்பட்டவில்லை. ஐந்து நிலைகளில் போரோபுதூர் கட்டுமானம் நடைபெற்றுள்ளது.[4] போரோபுதூரின் கட்டுமானம் 760 அல்லது 770-ஆம் ஆண்டுகளில் தொடங்கி இருக்கலாம் என்றும்; கி.பி 830 வரை தொடர்ந்து இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர் மிக்சிக் (John N. Miksic) கூறுகிறார்.

கிபி 779, கிபி 780, கிபி 792, கிபி 824, கிபி 833 என ஐந்து நிலைக் கட்டுமானங்களில், சமரதுங்கனின் ஆட்சியின் போது நான்காம் கட்டுமானம் நடைபெற்று இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கூறுகின்றனர்.[5][6][7]

வாழ்க்கை

சிறீ விஜயப் பேரரசின் அரசர் தருமசேதுவின் மகள் இளவரசி தேவி தாராவை (Dewi Tara) சமரதுங்கன் மணந்தார். இது சைலேந்திரர்களுக்கும் |சிறீ விஜயர்களுக்கும் இடையே நெருக்கமான அரசியல் கூட்டணியை உருவாக்கியது.

சமரதுங்கனுக்கு பாலபுத்திரன் என்ற ஒரு மகனும், பிரமோதவர்தனி என்ற ஒரு மகளும் இருந்தனர். சமரதுங்கன் இறந்த பிறகு, பிரமோதவர்தனி சஞ்சய அரச மரபைச் சேர்ந்த சைவ சமய ராக்காய் பிக்கத்தான் என்பவரை மணந்தார். மத்திய ஜாவா மீதான பாலபுத்திரனின் அதிகாரத்தைக் கைப்பற்றிய ராக்காய் பிக்கத்தான், பாலபுத்திரனை ஜாவா தீவை விட்டு வெளியேற்றினார்.[1]:108

சமரதுங்கனின் ஆட்சிக் காலத்தில், இரண்டாம் செயவர்மன், மீக்கோங் படுகையில் உள்ள இந்திரபுராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[8]:97[9]:353–354 பின்னர் இரண்டாம் செயவர்மன், சைலேந்திரர்கள் மற்றும் சிறீ விஜயத்தினர்களின் தொடர்புகளில் இருந்து விலகிக் கொண்டு கெமர் பேரரசு எனும் ஒரு புதிய கெமர் அரசை உருவாக்கினார்.[10][11]

மேலும் காண்க

மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்

முன்னர் மாதரம் இராச்சியத்தின் மகாராஜா
சமரதுங்கன்
802 - 842
பின்னர்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.
  2. Drs. R. Soekmono (1988) [1973]. Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed (5th reprint ed.). Yogyakarta: Penerbit Kanisius. p. 46.
  3. Drs. R. Soekmono (1973). Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed. Yogyakarta: Penerbit Kanisius. p. 46.
  4. Dumarçay 1991, ப. 4, 52.
  5. Dumarçay 1991, ப. 4.
  6. Miksic 1990, ப. 25, 46.
  7. Van der Meulen 1979, ப. 41.
  8. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.
  9. Higham, C. (2014). Early Mainland Southeast Asia. Bangkok: River Books Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-6167339443.
  10. "Khmer Empire | Infoplease". www.infoplease.com. Archived from the original on 12 October 2012. Retrieved 15 January 2023.
  11. Reynolds, Frank. "Angkor". Encyclopædia Britannica. Encyclopædia Britannica, Inc. Archived from the original on 26 July 2019. Retrieved 17 August 2018.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya