செத்தியூ மாவட்டம்
செத்தியூ மாவட்டம் (ஆங்கிலம்: Setiu District; மலாய்: Daerah Setiu; சீனம்: 士兆县; ஜாவி: ستيو) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் எட்டு மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் வடக்கில் பெசுட் மாவட்டம் (Besut District); தெற்கில் கோலா திராங்கானு மாவட்டம் (Kuala Terengganu District); கிழக்கில் கோலா நெருசு மாவட்டம் (Kuala Nerus District) மற்றும் தென்சீனக் கடல் (South China Sea) ஆகியவை எல்லைகளாக உள்ளன. செத்தியூ மாவட்டம் திராங்கானு மாநிலத்தில் இரண்டாவது புதிய மாவட்டம்; மற்றும் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டமாகும். இதன் தலைநகரமான பண்டார் பரமேசுவரி (Bandar Permaisuri). இந்த மாவட்டத்தின் பொருளாதார மற்றும் வணிக மையமாகவும் செயல்படுகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள் மற்ற நகரங்கள் சாலோக் (Chalok), சுங்கை தோங் (Sungai Tong), குந்தோங் (Guntong) மற்றும் பெனாரிக் (Penarik). சொல் பிறப்பியல்19-ஆம் நூற்றாண்டில் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தினால் (Dutch East Indies) இந்தோனேசிய தீவுக்கூட்டங்கள் (Indonesian archipelago) கைப்பற்றப்பட்டன. அதன் விளைவாக அந்தப் பகுதியைச் சேர்ந்த தோக் செத்தியூ (Tok Setiu) எனும் பூகிஸ் (Bugis) தலைவர் ஒருவர் திராங்கானுவிற்கு குடிபெயர்ந்தார். அந்தக் கட்டத்தில் திராங்கானு சுல்தான்; பூகிஸ் தலைவர் தோக் செத்தியூவிற்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கோலா திராங்கானுக்கு வடக்கே அமைந்துள்ள சமவெளியில் ஒரு கிராமத்தைத் திறக்க அனுமதி வழங்கினார். வரலாறு1920-களின் முற்பகுதியில், திராங்கானுவில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப நாட்களில், செத்தியூ மாவட்டம் ஒரு சிறிய நிலப்பரப்புடன் இருந்தது. 1923 தொடங்கி 1935 வரை அண்டைய மாவட்டமான பெசுட் மாவட்டத்துடன் (Besut District) இணைக்கப்பட்டது. பின்னர் செத்தியூ மாவட்டம் ஒரு தனி மாவட்டமாக மாற்றப்பட்டது. 1935-ஆம் ஆண்டில் பெசுட் மாவட்டத்திற்கும் மாநில தலைநகரான கோலா திராங்கானு நகருக்கும் இடையே செத்தியூ மாவட்டம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. 1985-ஆம் ஆண்டில் அதன் தற்போதைய எல்லைகளைக் கொண்ட செத்தியூ மாவட்டம் மறுசீரமைக்கப்பட்டது.[4][5] செத்தியூவில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் மலாய் இனத்தவர்கள். சிறுபான்மையினர் சீனர்கள், சயாமியர்கள் மற்றும் இந்தியர்கள். செத்தியூவில் உள்ள பெரும்பாலான மலாய்க்காரர்கள்; குறிப்பாக வடக்குப் பகுதியில் உள்ளவர்கள் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியைப் பேசுகிறார்கள். இருப்பினும் செத்தியூவின் தெற்குப் பகுதியில் வசிப்பவர்கள் திராங்கானு மலாய் மொழியை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். பொதுநிர்வாகப் பிரிவுகள்செத்தியூ மாவட்டம் 7 முக்கிம்கள் (Mukim) எனும் துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia