சுல்தான் மாமுட் வானூர்தி நிலையம்
சுல்தான் மாமுட் வானூர்தி நிலையம் அல்லது கோலா திராங்கானு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: TGG, ஐசிஏஓ: WMKN); (ஆங்கிலம்: Sultan Mahmud Airport அல்லது Kuala Terengganu Airport; மலாய்: Lapangan Terbang Sultan Mahmud) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், கோலா நெருஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.[1][2] இந்த வானூர்தி நிலையம், கோலா திராங்கானு மாநகர் மக்களுக்கும்; திராங்கானு மாநில மக்களுக்கும்; கிளாந்தான் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள மக்களுக்கும் வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது. 1979-ஆம் ஆண்டில் இருந்து 1998-ஆம் ஆண்டு வரை திராங்கானு மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான் மகமூத் அல்-முக்தாபி பில்லா ஷாவின் (Sultan Mahmud Al-Muktafi Billah Shah) நினைவாக இந்த விமான நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது. பொது2008-ஆம் ஆண்டில், சுல்தான் மாமுட் வானூர்தி நிலையத்தை மேம்படுத்த மலேசிய அரசாங்கம் 200 மில்லியன் ரிங்கிட் வழங்கியது. ஓடுபாதையை நீட்டிக்கவும், வானூர்தி நிலையத்தின் முனையத்தை மேம்படுத்தவும் அந்த நிதி பயன்படுத்தப்பட்டது.[3] ஒவ்வோர் ஆண்டும் 2 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் இந்த வானூர்தி நிலையத்த்தின் முனையம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. போயிங் 747-400 வானூர்திசவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா மற்றும் மதீனா வழியாக மக்காவிற்கு பயணிகளை கொண்டு செல்ல மலேசியா எயர்லைன்சு நிறுவனம் தாபோங் அஜி (Tabung Haji) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 2008 அக்டோபர் 11-ஆம் தேதி, மலேசியா எயர்லைன்சு நிறுவனத்தின் மிகப் பெரிய போயிங் 747-400 ரக வானூர்தி (Boeing 747-400) அங்கு தரையிறங்கியது. பெரிய ரக வானூர்திகள் சுல்தான் மாமுட் வானூர்தி நிலையத்தில் தரை இறங்க முடியும் என்பதற்கு அந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைந்தது. வானூர்திச் சேவைகள்
உள்நாட்டுச் சேவைகள்
இலக்குகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia