பதினான்காம் திருத்தந்தை லியோ (Leo XIV), தமிழில் பதினான்காம் சிங்கராயர், இயற்பெயர்: இராபர்ட் பிரான்சிசு பிரீவோஸ்ட், (Robert Francis Prevost, பிறப்பு: 14 செப்டம்பர் 1955)[1]கத்தோலிக்கத் திருஅவையின் தலைவரும், வத்திக்கான் நகர அரசின் இறையாண்மையாளரும் ஆவார். திருத்தந்தை பிரான்சிசு இறந்ததைத் தொடர்ந்து, 2025 மே 8 அன்று நடைபெற்ற மாநாட்டில் இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலினொய், சிகாகோவில் பிறந்த இவர் அகத்தீனியத் துறவி ஆவார். பெருவில் 1985 முதல் 1986 வரையும், பின்னர் 1988 முதல் 1998 வரையிலும் பங்கு குருவாகவும், மறைமாவட்ட அலுவலராகவும், குருமட ஆசிரியராகவும், மறைமாவட்ட நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். 2023இல் கர்தினாலாக இவர் நியமிக்கப்பட்டார். ஆயர்களுக்காக திருப்பீட பேராயத்தின் தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவுக்காக திருப்பீடக் குழுவின் தலைவராகவும் 2023 முதல் இவர் பணியாற்றி வருகின்றார். சிக்லேயோ மறைமாவட்ட ஆயராக 2015 முதல் 2025 வரையிலும், 2001 முதல் 2013 வரை அகுஸ்தினார் சபையின் மாநிலத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். [2][3][4]
2025 மே 8 அன்று, பதினான்காம் லியோ (பதினான்காம் சிங்கராயர்) என்ற ஆட்சிப்பெயரை ஏற்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில் பிறந்த இவர் ஒரு பெரு குடிமகனும் ஆவார்.[5]