மரியா அஞ்சலீட்டா இரேசா (Maria Angelita Ressa, பிறப்பு: அக்டோபர் 2, 1963) பிலிப்பீனிய-அமெரிக்கப் பத்திரிகையாளரும், நூலாசிரியரும், 'இராப்பிலர்' இணையவெளிப் பத்திரிகையின் பணிப்பாளரும் ஆவார்.[1] இவர் முன்னதாக சி.என்.என் செய்தி நிறுவனத்திற்காக தென்கிழக்காசியாவின் முன்னணி புலனாய்வு செய்தியாளராக இரண்டு தசாப்தங்களாகப் பணியாற்றியுள்ளார்.
2020-இல், சர்ச்சைக்குரிய பிலிப்பீன்சு இணையவெளிக் குற்ற எதிர்ப்புச் சட்டத்தின் கீழ்[2][3] அந்நாட்டு அரசாங்கத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.[4][5] இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என மனித உரிமை அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர்களால் கண்டனம் செய்யப்பட்டது.[6][7][8]
இவருக்கு 2021-இற்கான அமைதிக்கான நோபல் பரிசு உருசிய ஊடகவியலாளர் திமீத்திரி முராத்தொவுடன் இணைந்து "சனநாயகம் மற்றும் நீடித்த அமைதிக்கான முன்நிபந்தனையான கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளுக்காக" வழங்கப்பட்டது.[9][10]
டைம்'இன் போலிச் செய்திகளை எதிர்த்துப் போராடும் உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்களின் தொகுப்பில் இரேசா 2018 ஆம் ஆண்டின் சிறந்த நபராகச் சேர்க்கப்பட்டார். 2013 பிப்ரவரி 13 அன்று, இவரது ராப்பிலர் பத்திரிகை தொழிலதிபர் வில்பிரெடோ கெங் குறித்து ஒரு தவறான செய்தியை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டார். 2020 சூன் 15 அன்று, மணிலாவில் உள்ள ஒரு நீதிமன்றம் இவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.[5] இரேசா பிலிப்பீனிசின் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துதெர்த்தேயின் வெளிப்படையான விமர்சகராக இருப்பதால், அவரது கைதும் தண்டனையும் எதிர்க்கட்சிகளினாலும், சர்வதேச சமூகத்தினராலும் துதெர்த்தே அரசின் அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகப் பார்க்கப்பட்டது.[11][12][13]எல்லைகளற்ற செய்தியாளர்களால் தொடங்கப்பட்ட தகவல், சனநாயக ஆணையத்தில் 25 முன்னணி நபர்களில் இரேசாவும் ஒருவர்.[14]
2018 நவம்பரில், பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் குழு "தொடர்ச்சியான தொல்லைகளுக்கு மத்தியில் அவரது ஊடக தைரியத்தை அங்கீகரிப்பதற்காக" குவென் இஃபில் பத்திரிகை சுதந்திர விருதை இரேசாவுக்கு வழங்கியது.[16]
2018 திசம்பரில், டைம் இதழின் 2018 ஆம் ஆண்டின் நபராக, உலகெங்கிலும் உள்ள பல செய்தியாளர்களின் "உண்மையின் மீதான போர்" உடன் இணைந்து பணியாற்றியமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[17][18] 1986 ஆம் ஆண்டில் முன்னாள் அரசுத்தலைவர் கொரசோன் அக்கினோவுக்குப் பிறகு பட்டம் பெற்ற இரண்டாவது பிலிப்பீனிய இரேசா ஆவார்.
இரேசா 2021 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சர் யோனாசு கார் இசுட்டோரால் பரிந்துரைக்கப்பட்டார்.[10][22] 2021 அக்டோபர் 8 இல், இரெசா அதிகாரப்பூர்வமாக திமீத்திரி முராத்தொவ் உடன் பரிசு பெறுபவராக அறிவிக்கப்பட்டார். "சனநாயகம் மற்றும் நீடித்த அமைதிக்கான முன்நிபந்தனையான கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளுக்காக" இது வழங்கப்பட்டது.[23]