தாவீது மாக்மிலன்
தாவீது மாக்மிலன் (David MacMillan, டேவிட் மேக்மிலன், பிறப்பு: 16 மார்ச் 1968)[1] இசுக்காட்லாந்தைச் சேர்ந்த[2][3][4][5][6] வேதியியலாளரும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஆவார். இவர் 2010 முதல் 2015 வரை பிரின்சுடன் பல்கலைக்கழக வேதியியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார்.[7][8] இவர் 2021 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை "சீரொருமையற்ற வேதிப்பொருள்களை உருவாக்கும் உயிர்க்கரிம வினையூக்கிகளைக் கண்டுபிடித்து வளர்த்தெடுத்தமைக்காக" பெஞ்சமின் இலிசுத்துடன் பகிர்ந்து கொண்டார்.[9] கல்வியும், ஆய்வுப் பணியும்![]() மாக்மிலன் வேதியியலுக்கான இளம் அறிவியல் பட்டத்தை கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்.[10][11] 1990 இல், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் லாரி ஓவர்மேனின் வழிகாட்டலில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்டார்.[12] முனைவர் பட்டத்தை 1996 இல் பெற்றுக் கொண்டார்.[11] அதன் பின்னர், மாக்மிலன் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். முனைவர் பட்டத்திற்குப் பின்னரான படிப்பு எதிர் உருவமை வினையூக்கிகளைப் பற்றியதாக இருந்தது, குறிப்பாக Sn(II) இல் இருந்து பெறப்பட்ட பைசோக்சசோலைன் வடிவமைப்பும் வளர்ச்சியும் ஆகும்.[11] கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) (1998), கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் (2000) ஆகியவற்றிலும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். 2006 இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியப் பணியை ஆரம்பித்தார்.[11] 2010 முதல் 2014 வரை மாக்மிலன் வேதியியலுக்கான வேந்திய சங்கம் வெளியிடும் கெமிக்கல் சயன்சு ஆய்விதழின் தலைமை தொகுப்பாசிரியராகப் பணியாற்றினார்.[11] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia