திமீத்திரி முராத்தொவ்
திமீத்திரி அந்திரியேவிச் முராத்தொவ் (Dmitry Andreyevich Muratov; உருசியம்: Дми́трий Андре́евич Мура́тов, பிறப்பு: 30 அக்டோபர் 1961) என்பவர் உருசியப் பத்திரிகையாளர் ஆவார். இவர் நோவயா கசியெத்தா பத்திரிகையின் ஆசிரியராக 1995 முதல் 2017 வரை பணியாற்றினார்.[1] இவருக்கு 2021 இற்கான அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பீன்சின் ஊடகவியலாளர் மரியா இரேசாவுடன் இணைந்து வழங்கப்பட்டது.[2] பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் குழுவால் நோவயா கசியெத்தா பத்திரிகை "உருசியாவில் இன்று தேசிய செல்வாக்குள்ள உண்மையான விமர்சன செய்தித்தாள்" என்று அழைக்கப்படுகிறது. அரசாங்க ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற முக்கிய தலைப்புகளில் முழுமையான அறிக்கைகளுக்காக இந்தப் பத்திரிகை அறியப்படுகிறது.[3] 2007 ஆம் ஆண்டில், பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு இவருக்கு சர்வதேச பத்திரிகை சுதந்திர விருதை வழங்கியது. தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், சிறைவாசங்களை எதிர்கொண்டு பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதில் தைரியம் காட்டும் பத்திரிகையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.[4] 2010 இல் இவருக்கு பிரான்சின் உயர் விருதான செவாலியே விருது வழங்கப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia