மானசா தேவி கோயில், அரித்துவார்
மானசா தேவி கோயில் (Mansa Devi Temple) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள புனித நகரமான அரித்துவாரில், மானசா தேவிக்காக அமைக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும் . இமயமலையின் தென்கோடி மலைத் தொடரான சிவாலிக் மலையின் [1][2] உச்சியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. பில்வ தீர்த்தம் என்றும் அழைக்கப்படும் இந்த கோவில் அரித்துவாரிலுள்ள பஞ்ச தீர்த்தங்களில் (ஐந்து புனித யாத்திரைகள்) ஒன்றாகும். சக்தியின் வடிவமான மானசா தேவியின் புனித இருப்பிடமாக அறியப்படும் இக்கோயில் சிவபெருமானின் மனதில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. மானசா வாசுகியின் (பாம்பு) சகோதரியாகக் கருதப்படுகிறார். அவள் மனித அவதாரத்தில் வந்த சிவபெருமானின் மகள் என்றும் நம்பப்படுகிறது. மேலும், உண்மையான பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் இந்தத் தெய்வம் நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது. மானசா தேவி கோயில் ஒரு சித்தர் பீடம் (இவை வழிபடுபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்று அறியப்படுகிறது) ஆகும். அரித்துவாரில் அமைந்துள்ள மூன்று பீடங்களில் இதுவும் ஒன்று. சண்டி தேவி கோவிலும், மாயா தேவி கோவிலும் மற்ற இரண்டு இடங்களாகும்.[3] சன்னதியின் உள்ளே இரண்டு தெய்வங்கள் உள்ளன. ஒன்று எட்டு கரங்களுடன் காணப்படுகிறது. மற்றொன்று மூன்று தலைகளையும் ஐந்து கரங்களையும் கொண்டுள்ளது. கோயில்![]() அரித்துவாருக்கு செல்லும் யாத்ரீகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக மானசா தேவி கோவில் என்று கருதப்படுகிறது.[4] இது அரித்துவாரின் புனித பாரம்பரியத்தை மேம்படுத்துகிறது. இது கடந்த பல நூற்றாண்டுகளாக அந்த இடத்தில் இருந்து வருகிறது.[5] இங்கிருந்து கங்கை ஆறு, அரித்துவாரின் சமவெளிகளின் காட்சிகளைக் காண இயலும். இக்கோயிலை அடைய இந்த புனித தலத்திற்கு மலையேற்றப் பாதையில் செல்ல வேண்டும் அல்லது கம்பிவட வழி சேவையில் சவாரி செய்ய வேண்டும். "மானசா தேவி உடன்கடோலா" என்று அழைக்கப்படும் கம்பிவட வழி சேவை யாத்ரீகர்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது யாத்ரீகர்களை அருகில் உள்ள சண்டி தேவி கோயிலுக்கு கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கம்பிவட வழி, கீழ்நிலையத்திலிருந்து நேரடியாக மானசா தேவி கோயிலுக்கு யாத்ரீகர்களை அழைத்துச் செல்கிறது. கம்மிவப வழிப் பாதையின் மொத்த நீளம் 540 மீட்டர் (1,770 அடி). அது 178 மீட்டர் (584 அடி) உயரம்வரை செல்கிறது. ஒரு சாதாரண நாளில், கோவில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மதிய உணவிற்காக நண்பகல் 12 முதல் 2 மணி வரை மூடப்படும். ![]() பார்வதி தேவியின் இரண்டு வடிவங்களான மானசா தேவியும் சண்டி தேவியும் எப்போதும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள மாதா மானசா தேவி கோயிலுக்கு அருகில் சண்டிகரில் சண்டி கோயில் உள்ளது என்பதால் இந்த நம்பிக்கை மற்ற விஷயங்களிலும் உண்மையாக உள்ளது. அரித்துவாருக்கு அருகில் உள்ள பில்வ பர்வத்தில் அமைந்துள்ள மானசா தேவி கோயில் பிரபலமானது. அரித்துவாரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பாதசாரி பாதை ஒன்று அமைந்துள்ளது. மற்ற மானசா தேவி கோயில்கள்
இதனையும் காண்கசான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia