தேசிய நெடுஞ்சாலை 58 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 58 (National Highway 58) (NH 58) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரத்தையும், (புதுதில்லி அருகே), உத்தராகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் மற்றும் உத்தராகண்ட்-திபெத் எல்லைக் கிராமமான மணா கிராமத்தை, இணைக்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 538 km (334 mi) ஆகும். இந்நெடுஞ்சாலை புதுதில்லி அருகே உள்ள காசியாபாத்தில் துவங்கி, மோதிநகர், மீரட், முசாபர்நகர், ரூர்க்கி, அரித்துவார், ரிஷிகேஷ், தேவபிரயாகை, சிறிநகர், ருத்திரப்பிரயாகை, கர்ணபிரயாகை, நந்தபிரயாகை, விஷ்ணுபிரயாகை, சமோலி, ஜோஷி மடம், பத்ரிநாத் வழியாக மணா கிராமத்தில் முடிகிறது. இந்நெடுஞ்சாலை உத்தரப்பிரதேச மாநிலத்தில் 165 கிலோ மீட்டர் நீளத்திலும், உத்தராகண்ட் மாநிலத்தில் 373 கிலோ மீட்டர் நீளத்திலும் செல்கிறது. [1] தில்லி முதல் ரிஷிகேஷ் வரையிலான இந்நெடுஞ்சாலையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தாலும், இமயமலையில் ரிஷிகேஷ் முதல் மணா கணவாய் வரையிலான இந்நெடுஞ்சாலையை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பாலும் பராமரிககப்படுகிறது. தற்போது இந்நெடுஞ்சாலை மீரட், முசாபர்நகர் மற்றும் ரூர்க்கி நகரங்களைத் தொடாது, சுற்றுச்சாலை வழியாகச் செல்கிறது.[2] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia