ரெம்பாவ் மக்களவைத் தொகுதி
ரெம்பாவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Rembau; ஆங்கிலம்: Rembau Federal Constituency; சீனம்: 林茂国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், ரெம்பாவ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P131) ஆகும்.[5] ரெம்பாவ் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டில் இருந்து ரெம்பாவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] ரெம்பாவ் மாவட்டம்ரெம்பாவ் மாவட்டம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். ரெம்பாவ் மாவட்டத்தின் முக்கிய நகரம் ரெம்பாவ் நகரம். கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 95 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து 23 கி.மீ. தொலைவிலும் ரெம்பாவ் நகரம் அமைந்து உள்ளது. ரெம்பாவ் ஆளுநர் இன்று வரையிலும் பழைய மினாங்கபாவு முறையில் மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப் படுகிறார். ரெம்பாவ் மாவட்டத் தலைவர் பெங்குலு என்று முன்பு அழைக்கப் பட்டார். தற்போது யாங் தெர் அமாட் மூலியா உண்டாங் லுவாக் ரெம்பாவ் (Yang Teramat Mulia Undang Luak Rembau) என்று அழைக்கப் படுகிறார். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மன்னர் யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar of Negeri Sembilan). நெகிரி செம்பிலான் அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப் படுபவர்களில் யாங் தெர் அமாட் மூலியா உண்டாங் லுவாக் ரெம்பாவ் என்பவரும் ஒருவராவார். ரெம்பாவ் மக்களவைத் தொகுதி
ரெம்பாவ் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia