நீரிணை குடியேற்றங்கள்
நீரிணைக் குடியேற்றங்கள் அல்லது தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகள்; ஆங்கிலம்: Straits Settlements; மலாய்: Negeri-Negeri Selat) என்பது 1826-ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவில், மலாக்கா நீரிணையை ஒட்டி உருவாக்கப்பட்ட பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் ஆகும். அந்த நீரிணைக் குடியிருப்புகள் பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் மாநிலங்களை உள்ளடக்கியவை. இந்த மாநிலங்கள் அனைத்தும் முன்பு பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தன. வரலாறு1824-ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு (Anglo-Dutch Treaty of 1824) ஒப்பந்தத்திற்குப் பிறகு, பினாங்கு மாநிலம், லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor) என்பவரால் நிர்வகிக்கப் பட்டது. மலாக்கா; மற்றும் சிங்கப்பூர் மாநிலங்கள் ஆளுநர் (Resident) என்பவரால் நிர்வகிக்கப் பட்டன. 1826-ஆம் ஆண்டில், பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களும் ஒன்றிணைக்கப்பட்டன. சில ஆண்டுகள் கழித்து பேராக் மாநிலத்தில் இருந்த டிண்டிங் (Dinding) எனும் பகுதியும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.[1] கொக்கோசு (கீலிங்) தீவுகள்இந்த நான்கு பகுதிகளும் நீரிணைக் குடியிருப்புகள் (Straits Settlements) எனும் பெயரில் அழைக்கப்பட்டன. இந்த ஒருங்கிணைப்பு, நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதையும்; நிர்வாகத் தரதை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டது. 1886-ஆம் ஆண்டில் கிறிஸ்மஸ் தீவு (Christmas Island) மற்றும் கொக்கோசு தீவுகள் (Cocos Islands); நீரிணைக் குடியிருப்புகளில் சேர்க்கப்பட்டன.[2][3] லபுவான் தீவு1 சனவரி 1907 முதல் போர்னியோ கடற்கரைக்கு அப்பால் உள்ள லபுவான் தீவும் நீரிணைக் குடியேற்றக் காலனியில் இணைக்கப்பட்டது. இருப்பினும் 1912-ஆம் ஆண்டில் லபுவான் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. நீரிணைக் குடியேற்றப் பகுதியில் இருந்த பெரும்பாலான பிரதேசங்கள், தற்சமயம் மலேசியாவின் ஒரு பகுதியாக உள்ளன. 1965-இல் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து சென்றது. 1955-ஆம் ஆண்டில், கொக்கோசு தீவுகள் ஆஸ்திரேலியா நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் மாற்றப்பட்டன. அதன் பின்னர் எஞ்சி இருந்த கிறிஸ்மஸ் தீவு 1958-இல், அதே ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டிற்குள் மாற்றப்பட்டது. காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia