ஆண்டு |
நிகழ்வு
|
1400 |
மலாக்கா சுல்தானகம் பரமேசுவரா, சிங்கப்பூர் இராச்சியத்தின் (Kingdom of Singapura) கடைசி மன்னரால் நிறுவப்பட்டது.
|
1403 |
சீனத் தளபதி சென் செங் (மிங் வம்சம்) (Chen Cheng - Ming Dynasty) மலாக்காவை அடைந்து சீனாவின் மிங் அரச வம்சாவளிக்கும் மலாக்கா அரசுக்கும் இடையே தூதரக உறவுகளை ஏற்படுத்தினார்.
|
முதல் மலாய் - சீன அகராதி சீன எழுத்துக்களில் எழுதப்பட்டது. மலாக்காவில் பயன்படுத்தப்படும் வர்த்தகம் தொடர்பாக 500 சொற்களைக் கொண்டது.
|
1409 |
சீனத் தளபதி செங் ஹோ (Cheng Ho) மலாக்காவை அடைந்தார். சீனா - மலாக்கா அரசுகளுக்கு இடையே தூதரக உறவுகளை வலுப்படுத்தினார்.
|
1414 |
[மலாக்கா அரசு சுமத்திரா பாசாய் (Samudera Pasai) அரசுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. பரமேஸ்வரா பாசாய் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார்.
|
1444 |
மலாக்காவின் புகழ்பெற்ற பழங்கதை சார்ந்த தளபதி (Legendary Laksamana) ஹங் துவா, (Hang Tuah) மலாக்காவில் பிறந்தார்.
|
1445 |
துன் பேராக் மலாக்கா இராணுவத்தை வழிநடத்தி சயாமியர்களை மூவார் எனும் இடத்தில் தோற்கடித்தார்.
|
1450 |
சாரிப் உல் ஹசீம் (Sharif ul-Hashim) என்பவர் மலாக்காவில் இருந்து சூலு தீவிற்குச் சென்றார். சூலு அரசரின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். சூலு சுல்தானகத்தை (Sultanate of Sulu) உருவாக்கினார்.
|
1451 |
மலாக்கா அரசு தென்கிழக்காசியாவில் இஸ்லாம் மதத்தின் மையத் தளமாக விளங்கியது.
|
1456 |
துன் பேராக் மீண்டும் மலாக்கா இராணுவத்தை வழிநடத்தி சயாமியர்களைப் பத்து பகாட் எனும் இடத்தில் தோற்கடித்தார். அவர் மலாக்காவின் பெண்டாஹாராவாகப் பதவி உயர்வு பெற்றார்.
|
1459 |
சீனாவின் மிங் பேரரசர் தனது மகள் ஹாங் லி போவையும் (Hang Li Po) மற்றும் 500 விசுவாசிகளையும் மலாக்காவின் சுல்தான் மன்சூர் ஷாவிற்குப் (Sultan Mansur Shah) பரிசாக அனுப்பி வைத்தார். மலாக்காவில் வாழ்ந்த சீனர்களுக்காகப் புக்கிட் சீனா (Bukit Cina) எனும் குடியேற்றப் பகுதியைச் சுல்தான் மன்சூர் ஷா நிறுவினார்.
|
1463 |
ஜப்பானைச் சேர்ந்த ரியூக்யூ அரசுடன் (Ryukyu Kingdom) மலாக்கா சுல்தானகம் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது.
|
1470 |
முதலமைச்சர் துன் பெசார் (Tun Besar) (முன்னர் மலாக்காவின் முதலைமைச்சராக இருந்த துன் பேராக்கின் மகன்), மலாக்கா இளவரசரின் தலைப்பாகையைத் (Tengkolok) தவறுதலாக இடம் மாற்றி வைத்த குற்றத்திற்காகக் கொலை செய்யப்பட்டார்.
|
மலாக்கா ராஜா முகமட் (Muhammad Shah of Pahang) பகாங்கிற்கு நாடு கடத்தப் பட்டார். அங்கே அவர் பகாங் சுல்தானகத்தைத் தோற்றுவித்தார்.
|