வரலாற்றுக்கு முந்திய மலேசியா
வரலாற்றுக்கு முந்திய மலேசியா (ஆங்கிலம்: Prehistoric Malaysia) என்பது, மலேசியாவில் உடற்கூற்றியல் அடிப்படையில் மனிதன் தோன்றியதற்கும் (Anatomically Modern Humans); பதிவு செய்யப்பட்ட வரலாற்றுத் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலப் பகுதியைப் பற்றியது ஆகும். மலேசியாவில் உடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனிதரின் மிகப் பழைய எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவற்றுள் பேராக் மனிதன் (Perak Man) 11,000 ஆண்டுகளுக்கும், பேராக் பெண் (Perak Woman) 8,000 ஆண்டுகளுக்கும் முந்தி வாழ்ந்தவர்கள். இந்த இருவரின் எச்சங்களும் லெங்கோங் (Lenggong) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை. இந்தக் களத்தில் சம்மட்டிகளைக் கொண்டு கற்கருவிகள் தயாரிக்கும் இடம் ஒன்றும்; சிதைவு அடையாத நிலையில் உள்ளது. தம்புன் குகை ஓவியங்களும் (Tambun Rock Art) பேராக் மாநிலத்தில்தான் உள்ளன. கிழக்கு மலேசியாவைச் (East Malaysia) சேர்ந்த சரவாக்கின் நியா குகைகளில் (Niah Caves) 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. காலவரிசை![]() 35,000+ ஆண்டுகளுக்கு முன் - தொடக்கக் கற்காலம்சரவாக்கில் உள்ள நியா குகைகள் (Sarawak's Niah Caves) வரலாற்றுக்கு முந்திய காலக் களம் ஆகும். இங்கே 40,000 ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் கண்டு எடுக்கப்பட்டன.[1] சபாவில் லகாட் டத்துவுக்கு அருயில் உள்ள மன்சூலி பள்ளத்தாக்கில் (Mansuli valley) கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் இதைவிடப் பழமையானவை எனத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். ஆனாலும் துல்லியமான காலக் கணிப்புப் பகுப்பாய்வுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. 10,000 – 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலம் (புதிய கற்காலம்)அந்தக் காலத்து மக்கள் கல் கருவிகள் மற்றும் நகைகளைப் பயன்படுத்தியதை; பேராக்கில் உள்ள லெங்கோங் பள்ளத்தாக்கில் இருந்து கிடைத்த தொல்பொருள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இந்த காலக் கட்டத்தின் தொல்பொருள் தரவுகள் அனைத்தும் குகைகள், பாறைகள் மற்றும் தங்கும் இடங்களில் இருந்து கிடைத்தவை. மேலும் அவை ஹோபின்கியன் (Hoabinhian) எனும் வேட்டையாடும் இனத்தவர்களுடன் தொடர்புடையவை. 3000 - 4000 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கற்கால விவசாயிகள் இந்தப் பகுதியில் வாழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[2] 2,500 ஆண்டுகளுக்கு முன்பு - வெண்கல காலம்புதிய பழங்குடியினர் மற்றும் கடல்வழிப் பயணிகள் உட்பட அதிகமான மக்கள் மலாயா தீபகற்பத்திற்குள் வந்தனர். அந்த வகையில் மலாய் தீபகற்பம், பண்டைய காலத்தில் கடல் வர்த்தகத்தில் குறுக்கு வழியாக மாறியது. மலேசியாவின் கடற்கரைக்கு வந்த கடல்வழிப் பயணிகளில் இந்தியர்கள், ஜாவானியர்கள் மற்றும் சீனர்களும் அடங்குவர். டாலமி (Ptolemy) எனும் பிரபலமான நாடு காண் வரலாற்று ஆசிரியர், மலாயா தீபகற்பத்திற்கு கோல்டன் செர்சோனீஸ் (Golden Chersonese) என்று பெயர் வைத்தார். மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia