பெரியநாயக்கன்பாளையம்
பெரியநாயக்கன்பாளையம் (ஆங்கிலம்:Periyanaickenpalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி ஜோதிபுரம், கஸ்தூரிபாளையம், குப்பச்சிபாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் என நான்கு வருவாய் கிராமங்கள் கொண்டது. அமைவிடம்இப்பேரூராட்சி, கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு பெரியநாயக்கன்பாளையம் தொடருந்து நிலையம் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு9.37 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 206 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 7,377 வீடுகளும், 25,930 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6] மேலும் பார்க்கஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia