மாளிகைத்திடல் சுந்தரேசுவரர் கோயில்

மாளிகைத்திடல் சுந்தரேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.[1]

அமைவிடம்

இக்கோயில் கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசம்-திருக்கருக்காவூர் சாலையில் 8 கி.மீ. தொலைவில் வெண்ணாற்றின் வட கரையின் இடது புறத்தில் உள்ள மாளிகைத்திடல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

இங்குள்ள இறைவன் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி சௌந்தர்யநாயகி ஆவார்.[1]

சப்தஸ்தானம்

திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும்.[2]

தற்போதைய நிலை

300 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டியர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் பராமரிப்பின்றி உள்ளது.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya