இரகுவார்ய தீர்த்தர்
இரகுவார்ய தீர்த்தர் (Raghuvarya Tirtha) (இறப்பு: 1557) இவர் ஓர் இந்து தத்துவஞானியும், அறிஞரும், இறையியலாளரும், துறவியுமாவார். இவர் மத்துவாச்சாரியாருக்கு அடுத்தடுத்து பதின்மூன்றாவது தலைவராக இருந்தார்.[1] பாரம்பரியத்தின் படி இவர் ஜெயதீர்த்தரின் புகழ்பெற்ற 'நியாய சுத்தம்' என்ற நூலை தனது சீடர்களுக்கு ஏழு முறை கற்பித்தார்.[2] சைதன்ய மகாபிரபுவுடனான சந்திப்புவேதாந்த அறிஞர் பாலதேவரின் கூற்றுப்படி, சைதன்யர், மத்துவாச்சாரியரின் இறையியல் நிலைப்பாட்டை உண்மை என்றும் வேதாந்தத்திற்கு ஏற்பவும் ஏற்றுக்கொண்டார். சைதன்ய சரிதாமிருதம்- மத்திய-லீலாவின் ஒன்பதாம் அத்தியாயத்தின்படி, சைதன்யர் இவரைச் சந்தித்து ஆன்மீக வாழ்க்கையின் வழிமுறைகளையும், முடிவுகளையும், ஒன்பது வகையான ஆன்மீக நடைமுறைகளைப் பற்றி விவாதித்தார். [3] படைப்புகள்இவர் பல படைப்புகளை இயற்றினார். ஆனால் இவரது சில படைப்புகளில் நியாயம் பற்றிய லகுபரிக்சா (அல்லது ரகுபரிக்சா), நாராயண பாண்டிதாச்சார்யரின் பிரமேய ரத்னமாலிகா, கிருட்டிண துதி (கன்னட ஒரு பக்தி பாடல்) மட்டுமே கிடைத்துள்ளது. [2] மேற்கோள்கள்நூல் ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia