பண்டரிபுரம் யாத்திரை![]() பண்டரிபுரம் யாத்திரை (Pandharpur Wari or Wari) இந்தியாவின் மகாராட்டிராமாநிலம் சோலாப்பூர் மாவட்டம், பண்டரிபுரம் நகரத்தில் குடிகொண்டுள்ள பாண்டுரங்க விட்டலரின் பக்தர்கள துளசி மணி மாலைகள் அணிந்து, ஆண்டுக்கு ஒரு முறை வைணவ சாதுக்களான ஞானேஸ்வர் மற்றும் துக்காராம் ஆகியோரின் சமாதிகள் உள்ள புனே நகரத்திற்கு அருகில் உள்ள ஆளந்தி மற்றும் தேகு பகுதிகளிலிருந்து அவர்களது பாதுகைகளை தனித்தனி பல்லக்குகளில் வைத்து, பல்லக்கை மாட்டு வண்டிகளில் ஏற்றி வர்க்காரி மரபுப்படி யாத்திரையாக செல்வர். யாத்திரையின் போது தம்புரா மற்றும் ஜால்ரா கட்டைகளை இசைத்து கொண்டே ஆடியும், பாடியும் நடைபயணமான பகவான் விட்டலர் கோயில் கொண்டுள்ள பண்டரிபுரத்திற்கு ஆடி மற்றும் கார்த்திகை மாதங்களில் வரும் ஏகாதசி அன்று யாத்திரை முடியும் [1][2][3] இந்த யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர் கலந்து கொள்வர்.[4] பண்டரிபுரம் யாத்திரை 21 நாட்கள் நடைபெறும் [5][6] யாத்திரையின் இறுதி நாளான ஆடி - கார்திகை மாத ஏகாதசி அன்று பீமா ஆற்றில் குளித்து பக்தர்கள் பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயிலுக்குச் சென்று விட்டலரை தரிசனம் செய்வது வழக்கம்.[7][8][9][10]வாரி என்பதற்கு மராத்தி மொழியில் யாத்திரை எனப்பொருளாகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia