இராமநாதன் அர்ச்சுனா
மரு. இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna, பிறப்பு: 28 சூன் 1986)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் மருத்துவரும் ஆவார். இவர் 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சைக் குழு 17இல் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2][3][4] பணிஅர்ச்சுனா சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார்.[5] 2024 சூலையில், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இடம்பெற்ற முறைகேடுகளையும் ஒழுங்கீனங்களையும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் அம்பலப்படுத்தியதற்காக இவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.[6] இதன் மூலம் அர்ச்சுனா ஒரு பிரபலமான நபராக அடையாளப்படுத்தப்பட்டார்.[7] அரசியலில்2024 நவம்பரில் சுயேச்சைக் குழு 17 என்ற அரசியல் குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார். இச் சுயேட்சைக் குழு 27,855 வாக்குகளைப் பெற்று ஒரு இடத்தைக் கைப்பற்றியது. அக்குழுவின் முதன்மை வேட்பாளரான அர்ச்சுனா 20,487 விருப்பு வாக்குகள் பெற்று முதலாவதாக வந்து நாடாளுமன்றம் சென்றார்.[4]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia