ஞானமுத்து சிறிநேசன்
ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuttu Sirinesan, பிறப்பு: 01 சூலை 1960) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். வாழ்க்கைச் சுருக்கம்ஞானமுத்து சிறிநேசன் மட்டக்களப்பு, படுவான்கரை, மகிழவெட்டுவான் என்ற ஊரில் ஞானமுத்து, பூரணம்மா ஆகியோருக்குப் பிறந்தவர்.[1] தந்தையார் ஒரு கிராம சேவை அலுவலர். ஆரம்பக் கல்வியை மகிழவெட்டுவான் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், உயர்கல்வியை வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார்.[1] 18 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.[1] அதே வேளையில் இவர் இளங்கலை, முதுகலை (அரசறிவியல்), பட்டப்பின் (கல்வி வித்தாண்மை) பட்டங்களையும் பெற்றுள்ளார். இலங்கை கல்வி நிருவாக சேவைத் தேர்வில் சித்தியடைந்து மட்டக்களப்பு மேற்கு உதவிக் கல்விப் பணிப்பாளராக நான்கு ஆண்டுகளும்,[1] பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2] அரசியலில்சிறிநேசன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகள் (48,821) பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[3][4][5][6][7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia