ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு
ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு அல்லது உப்கோ (ஆங்கிலம்: United Pasokmomogun Kadazandusun Murut Organisation); மலாய்: Pertubuhan Pasokmomogun KadazandusunMurut Bersatu) என்பது கிழக்கு மலேசியா, சபாவைச் சேர்ந்த கடசான், டூசுன், மூருட் இன மக்களையும் தீபகற்ப மலேசியாவில் பூர்வீக மக்களையும் பிரதிநிதிக்கும் ஓர் அரசியல் கட்சியாகும். உப்கோ என்று அழைக்கப்படும் இந்தக் கட்சி டான் ஸ்ரீ பெர்னர்ட் டொம்போக் என்பவரால், 1964 இல் தோற்றுவிக்கப்பட்டது.[1] சபாவில் வாழும் கடசான், டூசுன், மூருட் இன மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும் அந்தக் கட்சி அமைக்கப்பட்டது. அண்மைய காலங்களில் இக்கட்சி தீபகற்ப மலேசியாவிலும் கிளைகளைத் திறந்துள்ளது. பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சியாக இருக்கும் இந்தக் கட்சிக்கு, மலேசிய நாடாளுமன்றத்தில் நான்கு இடங்கள் உள்ளன. வரலாறுமேற்கோள்கள்
மேலும் தகவல்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia