சமூக மக்களாட்சி நல்லிணக்கக் கட்சி
சமூக மக்களாட்சி நல்லிணக்கக் கட்சி அல்லது கேடிஎம் (ஆங்கிலம்: Social Democratic Harmony Party அல்லது (KDM Party); மலாய்: Parti Kesejahteraan Demokratik Masyarakat (KDM); சீனம்: 社会民主和谐党) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி பீட்டர் ஆண்டனி மற்றும் சூயில் நுவாடிம் ஆகியோரால் 28 சனவரி 2022-இல் நிறுவப்பட்டது.[1][2][3] இது கடசான்-டூசுன் மற்றும் மூருட் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது ஆளும் சபா மக்கள் கூட்டணி அரசாங்கத்துடன் ஒரு பங்காளிக் கட்சியாகச் செயல்படுகிறது.[4][5] சபா மாநிலத்தின் கடசான்-டூசுன் மற்றும் மூருட் சமூகங்களைப் பொதுவாகக் குறிப்பிடும் கேடிஎம் (KDM) என்ற சுருக்கத்தை இந்தக் கட்சி தேர்ந்தெடுத்தது.[6][7] பொதுசபா மக்கள் கூட்டணி2020-ஆம் ஆண்டு சபா மாநிலத் தேர்தலில் அப்போதைய ஆளும் கூட்டணியான பாரிசான் நேசனல்; தனிப் பெரும்பான்மையைப் பெற்ற பின்னர், சமூக மக்களாட்சி நல்லிணக்கக் கட்சி; சபா மக்கள் கூட்டணி (GRS) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சபாவின் ஆளும் கட்சியாகத் தகுதி பெற்றது. அதன் தொடர்ச்சியாக சபா மக்கள் கூட்டணி இன்றும் ஆட்சியில் உள்ளது. மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia