சரவாக் தயாக் மக்கள் கட்சி
சரவாக் தயாக் மக்கள் கட்சி (ஆங்கிலம்: Sarawak Dayak People's Party; மலாய்: Parti Bansa Dayak Sarawak) (PBDS) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் இயங்கிய ஓர் அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி சரவாக் தயாக்கு பூர்வீக மக்களைச் சார்ந்த ஓர் அரசியல் கட்சியாக உருவாக்கப்பட்டது. 1983-இல், டான்ஸ்ரீ டத்தோ அமர் லியோ மோகி அனாக் ஐரோக் (Datuk Amar Leo Moggie Irok) என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சி, சரவாக் தேசிய கட்சியில் இருந்து (SNAP) பிரிந்து சென்ற கட்சியாகும்.[1] இந்தக் கட்சி1987 சரவாக் மாநிலத் தேர்தலில் 15 இடங்களை வென்றது. அதன் பங்காளிக் கட்சியான சரவாக் மலேசிய மக்கள் சங்கம் (PERMAS) 5 இடங்களை மட்டுமே வென்றது. பொதுதலைமைத்துவ நெருக்கடியின் காரணமாக, முதலில் 2003-ஆம் ஆண்டிலும் இரண்டாவதாக 2004-ஆம் ஆண்டிலும் சரவாக் தயாக் மக்கள் கட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. சரவாக் தயாக் மக்கள் கட்சியின் கலைப்பு, மேலும் இரண்டு புதிய கட்சிகளை உருவாக்க வழிவகுத்தது; ஒன்று சரவாக் மக்கள் கட்சி (PRS). சரவாக் மக்கள் கட்சி 2004-இல் பாரிசான் நேசனல் கூட்டணியுடன் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டது. மற்றொரு கட்சியான மலேசிய தயாக் காங்கிரசு கட்சி (Malaysian Dayak Congress) (MDC) சங்கங்களின் பதிவாளரிடம்(RoS) பதிவு செய்யத் தவறிவிட்டது.[2] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia