கெராம்பிட் தொடருந்து நிலையம்
கெராம்பிட் தொடருந்து நிலையம் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kerambit Railway Station மலாய்: Stesen Keretapi Kerambit) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பகாங், லிப்பிஸ் மாவட்டம், கெராம்பிட் சிறுநகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1] உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, இந்த நகரத்தின் பெயர் மலாய் சொற்றொடரான 'கெரா ஆம்பில்' (Kera Ambil) என்பதிலிருந்து பெறப்பட்டது. கெராம்பிட் நகரத்தில் ஏராளமான வாழைத் தோட்டங்கள் இருந்ததாகவும்; அந்தத் தோட்டங்களின் வாழைப் பழங்களை அப்பகுதியில் உள்ள குரங்குகள் தங்கள் விருப்பப்படி பறித்துச் சென்றதாலும்; அந்த இடத்திற்கு அப்பெயர் வந்ததாக அறியப்படுகிறது.[1] இந்த நிலையம் பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து சுமார் 263 கி.மீ.;கோலாலம்பூரில் இருந்து 189 கி.மீ.; தொலைவில் உள்ளது.[2] பொதுகெராம்பிட் நிலையம் கிழக்கு நகரிடை சேவையில், கெராம்பிட் மற்றும் அதன் அருகிலுள்ள சிறு சிறு நகரங்களுக்கும் இடையிலான ஒரு தொடர்பு மையமாக விளங்குகிறது. கெராம்பிட் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறக் கிராமங்களுக்கும் சேவை செய்கிறது. கெராம்பிட் நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[1][3] கோலா லிப்பிஸ் குவா மூசாங் வழித்தடம்கெராம்பிட் தொடருந்து நிலையம், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் கெராம்பிட் நகரத்திற்குப் பயணிக்க ஒரு பொதுப் போக்குவரத்துத் தேர்வாகவும் உள்ளது. 1920 முதல் 1960 வரையிலான காலப்பகுதியில் பல கிராமவாசிகளுக்கு தொடருந்துகள் முதன்மையான போக்குவரத்து முறையாக இருந்ததால், கெராம்பிட்டில் உள்ள தொடருந்து நிலையம் மலேசியாவின் சுதந்திரத்திற்கு முன்பே இருந்தே இயங்கி வருகிறது. தனியார் பேருந்துச் சேவைகளைக் காட்டிலும் பொதுத் தொடருந்துச் சேவைகளைப் பயன்படுத்தவே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த நிலையம் கோலா லிப்பிஸ் - குவா மூசாங் வழித்தடத்திற்கான முனையமாகவும் செயல்படுகிறது. நிலைய வசதிகள்
தொடருந்து சேவைகள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia