கூலாய் தொடருந்து நிலையம்
கூலாய் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kulai Railway Station; மலாய்: Stesen KTMB Kulai) என்பது மலேசியா, ஜொகூர், கூலாய் மாவட்டம், கூலாய் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கூலாய் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்து இருப்பதால், நகரத்தின் ஒவ்வோர் இடத்தில் இருந்தும் எளிதாகப் பயணிக்கும் தூரத்தில் உள்ளது.[1] இந்த நிலையம் கூலாய் நகரத்திற்கும்; மற்றும் கூலாய் ஜெயா; ஆயர் பெம்பான்; பண்டார் புத்ரா கூலாய் புக்கிட் பத்து இண்டாபுரா; கெலாப்பா சாவிட், சாலேங்; செடனாக்; சீலோங்; செனாய்; செங்காங் ஆகிய நகர்ப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது.[2] கூலாய் நகரம் இசுகந்தர் மலேசியா எனும் பொருளாதார மண்டலத்திற்குள் அமைந்து இருப்பதால் கூலாய் தொடருந்து நிலையத்தின் சேவைகளை அதிகமானோர் பயன்படுத்திக் கொள்கின்றனர். பொதுமலேசியாவின் பழைமையான தொடருந்துகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையம் 1909-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM West Coast Railway Line) அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளை வழங்குகிறது.[3] கூலாய் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், கூலாய் நகரத்தின் பெயர் இந்த நிலையத்திற்கும் வழங்கப்பட்டது.[4] கிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கல் திட்டம்கிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கப்பட்ட இரட்டை கண்காணிப்பு திட்டத்தின் (Gemas-Johor Bahru Double Tracking and Electrification Project) ஒரு பகுதியாக புதிய கூலாய் நிலையம் கட்டப்பட்டது. புதிய கேடிஎம் இடிஎஸ் மின்சாரச் தொடருந்து சேவைகளுக்கு இடமளிக்கும் வகையில், ஜொகூர் மாநிலத்தில் உள்ள மற்ற தொடருந்து வழித்தடங்களில் தற்போது மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.[5] மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[6] மேலும் காண்கமேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia