செகார் பேரா தொடருந்து நிலையம்
இந்த நிலையம் பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து சுமார் 273 கி.மீ.;கோலாலம்பூரில் இருந்து 199 கி.மீ.; தொலைவில் உள்ளது.[2] பொதுஇந்த நிலையம் கிழக்கு நகரிடை சேவையில், செகார் பேரா மற்றும் அதன் அருகிலுள்ள சிறுநகரங்களுக்கு இடையிலான ஒரு முனையமாக விளங்குகிறது. செகார் பேரா நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்கும் சேவை செய்கிறது. செகார் பேரா நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[3] கோலா லிப்பிஸ் குவா மூசாங் வழித்தடம்செகார் பேரா தொடருந்து நிலையம், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் செகார் பேரா நகரத்திற்குப் பயணிக்க ஒரு பொதுப் போக்குவரத்துத் தேர்வாகவும் உள்ளது. 1920 முதல் 1960 வரையிலான காலப்பகுதியில் பல கிராமவாசிகளுக்கு தொடருந்துகள் முதன்மையான போக்குவரத்து முறையாக இருந்ததால், செகார் பேராவில் உள்ள தொடருந்து நிலையம் மலேசியாவின் சுதந்திரத்திற்கு முன்பே இருந்தே இயங்கி வருகிறது. தூரப் பயணங்களுக்கு, தனியார் பேருந்துச் சேவைகளைவிட பொதுத் தொடருந்துச் சேவைகளைப் பயன்படுத்தவே செகார் பேரா மக்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த நிலையம் கோலா லிப்பிஸ் - குவா மூசாங் வழித்தடத்திற்கான முக்கிய முனையமாகவும் செயல்படுகிறது. நிலைய வசதிகள்
தொடருந்து சேவைகள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia