கொல்லங்கோடு நகராட்சி
கொல்லங்கோடு (Kollankodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது 16 அக்டோபர் 2021 அன்று பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டது . இந்த நகராட்சியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தூக்கத் திருவிழா கொண்டாடப்படுகிறது.[3] 2021-இல் கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைத்தல்கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிகளைக் கொண்டு 16 அக்டோபர் 2021 அன்று புதிதாக நிறுவப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[4][5] அமைவிடம்கொல்லங்கோடு நகராட்சி கன்னியாகுமரியிலிருந்து 51 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலிருந்து 52 கி.மீ. தொலைவிலும் கடற்கரையை ஒட்டியுள்ளது. அருகமைந்த ஊர்கள் மேற்கில் திருவனந்தபுரம் 35 கி.மீ.; வடக்கில் பாறசாலை 9 கி.மீ.; தெற்கில் மேடவிளாகம் 0.50 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் பாறசாலையில் உள்ளது. நகராட்சியின் அமைப்பு12.64 ச.கி.மீ. பரப்பும், 21 வார்டுகளும், 87 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6] நகராட்சியின் அலுவலர்கள்
மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8514 வீடுகளும், 38385 மக்கள்தொகையும் கொண்டது.[7][8] இதனையும் காண்கஆதாரங்கள்
வெளி இணைப்புகள்மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia