வங்சா மாஜு மக்களவைத் தொகுதி
வங்சா மாஜு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Wangsa Maju; ஆங்கிலம்: Wangsa Maju Federal Constituency; சீனம்: 峇都爱国会) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P116) ஆகும். இந்தத் தொகுதியில், ஒரு சதுர கி.மீ.-க்கு 13,000 பேருக்கு மேல் வசிக்கின்றனர். மலேசியாவில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும், இந்தத் தொகுதி மட்டுமே அதிகமான மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது.[4] வங்சா மாஜு மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் இருந்து வங்சா மாஜு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது. வங்சா மாஜுவங்சா மாஜு புறநகர்ப் பகுதி, கோலாலம்பூரில் உள்ள மிகப் பெரிய நகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். அத்துடன் இந்தப் புறநகர்ப் பகுதி சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் மாவட்டம்; மற்றும் செதாபாக், தாமான் மெலாத்தி நகர்ப் புறங்களால் சூழப்பட்டு உள்ளது. வங்சா மாஜு புறநகர்ப் பகுதியின் பொருளாதாரம் பெரும்பாலும் வணிகம் சார்ந்ததாகும். இங்கு பற்பல வணிகப் பேரங்காடிகள், வணிக மாளிகைகள் மற்றும் இரவு சந்தை தளங்கள் உள்ளன. வாங்சா மாஜுவின் அசல் பெயர் அவ்தோர்ன்டன். வங்சா மாஜு தற்போது அமைந்துள்ள இடம், 1900-ஆம் ஆண்டு-களில் இருந்து 1980-ஆம் ஆண்டுகள் வரை அவ்தோர்ன்டன் (Hawthornden) எனும் பெயரில் அழைக்கப்பட்டது. அங்கு அந்தக் காலக்கட்டத்தில் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. பொதுவாக அந்தத் தோட்டங்களை, செதாபாக் ரப்பர் தோட்டங்கள் என்று அழைத்தார்கள்.[5] முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது ஆட்சியின் போது, அவ்தோர்ன்டன் ரப்பர் தோட்டத்தை ஒரு புதிய நகரமாக உருவாக்க அந்தத் தோட்டம் தேர்வு செய்யப்பட்டது. அந்த வகையில், அந்தத் தோட்டத்தில் பண்டார் பாரு வங்சா மாஜு (Bandar Baru Wangsa Maju) நகர்ப் பகுதி உருவாக்கப்பட்டது. வங்சா மாஜு மக்களவைத் தொகுதி
வங்சா மாஜு மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
வங்சா மாஜு மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia