வராகசுவாமி கோயில், திருமலை
ஸ்ரீ வராகசுவாமி கோயில் (Sri Varahaswamy Temple) அல்லது பூ வராகசாமி கோயில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் உள்ள திருமலை என்ற மலை நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்து-வைணவத் கோயில். இந்த கோயில் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராக கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சுவாமியின் புஷ்கரிணியின் வடமேற்கு மூலையில், திருமலை வெங்கடசாலபதி கோயிலின் வடக்கு வளாகத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.[1][2] இந்த கோயில் வெங்கடேசுவரர் சன்னதியை விடப் பழமையானது என்று நம்பப்படுகிறது.[3] மத முக்கியத்துவம்புராணத்தின் படி, இரணியாட்சன் என்ற அரக்கனிடமிருந்து பூமியைக் காப்பாற்றிய பின்னர், விஷ்ணுவின் பன்றி அவதாரத்தில் வராக சுவாமி புஷ்கரிணியின் வடக்கு கரையில் தங்கியிருந்தார். எனவே திருமலை மலைகள் ஆதிவரகதலம் என்றும் குறிப்பிடப்படுகிறது.[2] தற்போதைய கலியுகத்தின் தொடக்கத்தில், வராகசுவாமி தனது வேண்டுகோளின் பேரில் விஷ்ணு - வெங்கடேஸ்வராவின் மற்றொரு வடிவத்திற்கு நிலத்தை நன்கொடையாக வழங்கினார். ஒரு நன்றியுணர்வாக, வெங்கடேஸ்வரா வராகவுக்கு முதல் மணி ஒலித்து, பூஜை மற்றும் நைவேத்யம் (உணவுப் பிரசாதம்) ஆகியவற்றை வழங்கினார். இது இன்றும் ஒரு பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகிறது.[4] பக்தர்கள் வெங்கடாசலபதியினை வணங்குவதற்கு முன்பாக வராகசுவாமியின் தரிசனம் ("பார்வை") பெறப் பரிந்துரைக்கப்படுகிறார்கள். வராக தரிசனம் செய்யாமல் திருப்பதி யாத்திரை முழுமையடையாது என்று நம்பப்படுகிறது.[1][4] வரலாறுஇந்த கோயில் கி.பி 1535 ஆம் ஆண்டில் பேடா திருமலச்சார்யாவால் புதுப்பிக்கப்பட்டது.[5] நிர்வாகம்திருமலை வெங்கடாசலபதி கோயிலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இக்கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படுகிறது . கட்டிடக்கலைசுவாமி புஷ்கரிணியின் வடக்கு கரையில் அமைந்துள்ள இந்த பாறை கோயில் வெங்கடேஸ்வரர் கோயிலின் வடக்கு மாட தெருவிலிருந்து அணுகப்படுகிறது.[1][2] பூஜைகள் மற்றும் பண்டிகைகள்வைகனாச ஆகமத்தின்படி தினசரி சடங்குகள் நடத்தப்படுகின்றன. வராகசுவாமி கோயிலின் முக மண்டபத்தில் வருடாந்திர பிரம்மோத்சவங்கள், வைகுண்டஏகாதேசி, ரதசப்தமி ஆகியவற்றின் போது சக்ரஸ்னம் நிகழ்வு நடைபெறும்.[6] வராக ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது.[1][2] மேலும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia