கோவிந்தராஜ சுவாமி கோயில், திருப்பதி
கோவிந்தராஜ சுவாமி கோயில், (Sri Govindarajaswamy Temple), இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் 1130இல் இராமானுசரால் நிறுவப்பட்டது.[1] இக்கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் இயங்குகிறது.[2] மூலவர்இக்கோயிலின் மூலவர் கோவிந்தராஜர் திருமலையில் குடிகொண்டுள்ள வெங்கடேஸ்வரருக்கு மூத்தவர் எனக் கருதப்படுகிறது.[2]ஆதிசேஷன் மீது யோக நித்திரையில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கும் கோவிந்தராஜரின் காலடியில் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி உடனுறைந்துள்ளனர். துணைக் கோயில்கள்கோவிந்தராஜர் கோயில் வளாகத்தினுள் பார்த்தசாரதி கோயில், கல்யாண வெங்கடேஸ்வர் கோயில்கள் துணைக் கோயில்களாக உள்ளது. மேலும் இக்கோயில் வளாகத்தில் புண்டரீக வல்லி, ஆண்டாள், ஆழ்வார்கள், இலக்குமி நாராயண சுவாமி, அனுமார், பெரிய நம்பி மற்றும் இராமானுசர் ஆகியவர்களின் தனி சன்னதிகள் அமைந்துள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia