ஆசியக் கிண்ணம் 2022 (2022 Asia Cup) என்பது ஆசியக் கிண்ணத்துடுப்பாட்டத் போட்டியின் 15வது பதிப்பாகும். இத்தொடர் 2022 ஆகத்து, செப்டம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில்பன்னாட்டு இருபது20 (இ20ப) பன்னாட்டுப் போட்டிகளாக விளையாடப்பட்டது.[1][2] தொடக்கத்தில் 2020 செப்டம்பரில் நடத்தத் திட்டமிடப்பட்டது, ஆனாலும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது.[3] பின்னர் 2021 சூன் மாதத்தில் இலங்கையில் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டு,[4] மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.[5] 2022 போட்டிகளை நடத்துவதற்கான உரிமையைத் தக்கவைத்த பிறகு, பாக்கித்தான் போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டது.[6] இருப்பினும், அக்டோபர் 2021 இல், ஆசியத் துடுப்பாட்ட அவை இலங்கை 2022 போட்டியை நடத்தும் என்று அறிவித்தது,[7] 2023 போட்டிகளை பாக்கித்தான் நடத்தும்.[8]
இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக போட்டியை நடத்தும் நிலையில் அந்நாடு இருக்காது என்று இலங்கை துடுப்பாட்ட வாரியம் 2022 சூலை 21 அன்று அறிவித்தது.[9][10] 2022 சூலை 27 அன்று, போட்டி அமீரகத்தில் விளையாடப்படும் என்று ஆசியத் துடுப்பாட்ட அவை உறுதிப்படுத்தியது,[11] இலங்கை போட்டியை நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டது.[12] போட்டிக்கான விளயாட்டரங்குகள் 2022 ஆகத்து 2 அன்று அறிவிக்கப்பட்டது.[13]
நடப்பு வாகையாளரான இந்திய அணி,[14] இத்தொடரில் சூப்பர் நான்கு நிலையில் தொடரில் இருந்து வெளியேறியது.[15] இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாக்கித்தானை 23 ஓட்டங்களால் வென்று, ஆறாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது.[16]
தகுதிகாண் சுற்று 2022 ஆகத்து மாதத்தில் இடம்பெற்றது.[17] 2020 ஏசிசி மேற்குப் பிராந்திய இ20 தொடரில் இருந்து முன்னேறிய[18]ஐக்கிய அரபு அமீரகத்திற்கும்குவைத்திற்கும் இடையிலும், 2020 ஏசிசி கிழக்குப் பிராந்திய இ20 போட்டிகளில் இருந்து முன்னேறிய[19]சிங்கப்பூர், ஆங்காங் அணிகளுக்கிடையே தகுதிகாண் சுற்று இடம்பெற்றது. இதில், ஆங்காங் அணி முதலிடத்தில் வந்து ஆசியக் கிண்ணப் போட்டிக்குத் தெரிவானது.[20]
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
விராட் கோலி (இந்) தனது முதலாவது இ20ப சதத்தைப் பெற்று, இந்தியாவுக்கான அதியுயர் இ20ப ஓட்டங்கள் (212) பெறப்பட்டது.[32] அத்துடன் கோலி பன்னாட்டு துடுப்பாட்டங்களில் தனது 71-ஆவது சதத்தைப் பெற்றார்.[33][34]