உடைந்த ஆத்திபாத கல்வெட்டின் பகுதி அஉடைந்த ஆத்திபாத கல்வெட்டின் பகுதி இஆத்திபாத கோசுண்டி கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்ட நிலத்தின் பரப்பு[1]
ஆத்திபாத கோசுண்டி கல்வெட்டுக்கள் (Hathibada Ghosundi Inscriptions), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் சித்தோர்கார் நகரத்திற்கு வடக்கே 8 மைல் தொலைவில் உள்ள நாகரி மற்றும் சித்தோர்காருக்கு தென்மேற்கு 3 மைல் தொலைவில் உள்ள கோசுண்டி எனும் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட, கிமு 2 அல்லது முதலாம் நூற்றாண்டுக் காலத்திய, சமசுகிருத மொழியில் பிராமி எழுத்துமுறையில் எழுதப்பட்ட கல்வெட்டுகளாகும்.[2][3] இக்கல்வெட்டுக்கள் இந்து சமயத்தின்வைணவப் பிரிவுத் தொடர்புடையதாகும். [4][5][6][7]
இக்கல்வெட்டுக்கள் அதன் பழமைக்கும் மட்டுமல்லாது, பண்டைய இந்திய சாத்திரங்கள், சமூகம், வரலாறு மற்றும் சமய நம்பிக்கைகள் பற்றிய தகவல்களின் ஆதாரமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.[2] ஆத்திபாத கோசுண்டிக் கல்வெட்டுகளில் பண்டைய இந்துக் கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் பலராமர் குறித்தும், கிமு முதல் நூற்றாண்டில் அக்கடவுளர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட் ஒரு கற்கோயில் குறித்தும், பூசை முறைகள் மற்றும் ஒரு மன்னர் அசுவமேத யாகம் செய்தததைக் குறிப்பிட்டுள்ளது.[4][8][9]மேலும் இக்கல்வெட்டுக்களில் கிருட்டிணன் மற்றும் பலராமர் பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள் என்றும் குறித்துள்ளது.[10]
ஆத்திபாத கோசுண்டி கல்வெட்டுக்கள், அயோத்தி கல்வெட்டு மற்றும் ஹேலியோடோரஸ் தூண் கல்வெட்டுகளின் படி, பண்டைய இந்தியாவில், கிமு 2-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் கிருஷ்ணர் வழிபாடு இருந்தது என அறியமுடிகிறது.[8][11][5][12]