பொம்பெயி இலக்குமி
பொம்பெயி இலக்குமி சிற்பம் (Pompeii Lakshmi)இந்தியாவில் யானைத் தந்தத்தால் செதுக்கப்பட்ட 24.5 செண்டி மீட்டர் உயரம் கொண்ட இலக்குமியின் நிர்வாணச் சிற்பம் ஆகும். தற்போது இச்சிற்பம் இத்தாலி நாட்டின் பொம்பெயி நகரத்தின் இடிபாடுகளிலிருந்து 1930ல் கண்டெடுக்கப்பட்டது. [1][2] [3] யானையின் தந்தத்திலான இலக்குயின் சிற்பம் தற்போது இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் தேசிய தொல்லியல் அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவான இரகசிய அருங்காட்சியகத்தில் பொது மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [3] சிலையின் அமைப்புயானையின் தந்தத்திலான இலக்குமி சிலையின் கழுத்து மற்றும் இடைகள் அழகிய நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலையின் இருபுறத்திலும் இரண்டு யட்சினிகள் அழகு சாதனப் பொருட்களுடன் காட்சியளிக்கின்றனர். [1] கிபி 79ல் வெசூவியஸ் எரிமலைச் சீற்றத்தால் பொம்பெயியில் இருந்த இலக்குமி சிற்பம் சேதமுற்றது.[1][2]இச்சிற்பம் கிபி 50-க்குள் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நேப்பிள்ஸ் தொல்லியல் அருங்காட்சியக அறிஞர்கள் கருதுகின்றனர். [3] தோற்றம்இலக்குமியின் தந்தச் சிலை வட இந்தியாவின் மதுரா நகரத்தில் அல்லது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்னா மாவட்டத்தில் உள்ள போகர்தன் எனுமிடத்தில் முதலில் செதுக்கப்பட்டிருக்கலாம் என தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.[4] இச்சிலையின் தலை உச்சியில் வட்ட வடிவில் சும்மாடு போன்ற அமைப்பு காணப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. [5] மேற்கு சத்திரபதி நாட்டு மன்னர் நாகபானன் , சாதவாகன இராச்சியத்தை, கிமு 25-75 முடிய, ஏறத்தாழ 50 ஆண்டுகளாக போர் முற்றுகையிட்டான். [6]போர் முற்றுகையின் போது சாதவாகனர்களின் இராச்சியத்திலிருந்த இலக்குமி சிலையை, மேற்கு சத்திரபதிகளின் படைவீரர்கள் கடத்திச் சென்று, உரோமானியர்களுக்கு, கடல் வணிகம் மூலம் விற்பனை செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. [7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia