ஆகிய முக்கிய சாலைகள் ஆரணியை இணைக்கின்றன.ஆரணிக்கு வெளியே ஆரணியை இணைக்க சென்னை (ஆற்காடு) சாலை, சென்னை சாலை மற்றும் கடலூர் சாலை ஒரு பைபாஸ் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன.
தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு (தடம் எண் - 202) 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இவற்றில் (தடம் எண் - 202UD) UD(ULTRA DELUXE SERVICE) எனப்படும் சொகுசு பேருந்துகள், குளிர்ச்சாதன பேருந்துகள்(Volvo AC Bus Service), விரைவு பேருந்து சேவைகளும்(Express Service) மற்றும் இடைநில்லா பேருந்து(Fast to Fast Service) எனப்படும் அதிவிரைவு பேருந்து சேவைகளும் இயக்கப்படுகிறது.
ஆரணி வழியாக ரயில்கள் இணைக்க நகரியில் இருந்து திண்டிவனம் பாதை மத்திய அரசு மூலம் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அத்துடன், ஆரணி சைதாபேட்டையில் அமைய வேண்டிய நிலையம் தனியார் பேருந்து நல முதலாளிகள் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளதால் ரயில் நிலையம் ஆரணி - திருவண்ணாமலை சாலையிலுள்ள களம்பூருக்கு எனுமிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆரணிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ஆரணி ரயில் நிலையம் ஆகும். இது 10 கி.மீ தொலைவில் ஆரணி - திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ளது. ஆயினும் வணிகப் புகழ் பெற்ற ஆரணி நகரத்திற்கு 10 கி.மீ. தொலைவில் உள்ள ரயில் நிலையம் இதுவாகும். ஆரணி வர விரும்பும் புதிய மக்கள் இந்த இரயில் நிலையமானது ஆரணிக்குச் சுலபமாக செல்ல வழி வகுக்கும். [சான்று தேவை]திருவண்ணாமலை நகரம் மற்றும் ஆரணி சந்திப்பு இரயில் நிலையங்களுக்கு அப்பால் மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ரயில் நிலையம் ஆகும். மக்கள் பயன்பாட்டிற்கு 1889 ஆம் வருடம் திறக்கப்பட்டது. இங்கிருந்து வேலூர், திருப்பதி, விழுப்புரம் ஆகிய ஊர்களும் ரயில் சேவை உள்ளது.
ஆரணியில் விமான நிலையங்கள் ஏதுமில்லை. இருந்தாலும் அருகிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் மூலம் பயணம் செய்யலாம். அருகிலுள்ள விமான நிலையங்களான சென்னை பன்னாட்டு விமான நிலையம் 123 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பெங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் 234 கி.மீ. தொலைவிலும் உள்ளது.