எரமநாயக்கன்பட்டி
எரமநாயக்கன்பட்டி (ERRAMANAICKENPATTI) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்).[4]> பழனி வருவாய் வட்டத்தின் இருபத்தேழாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:27) ஆகும்.[5] அமைவிடம்பழனியிலிருந்து திண்டுக்கல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கணக்கன்பட்டியிலிருந்து வடக்கே சுமார் 6 கி.மீ.தூரத்திலும், அமரபூண்டியிலிருந்து கிழக்கே சுமார் 5 கி.மீ. தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 513 மீட்டர் உயரத்தில் உள்ளது. [6] மக்கள் வகைப்பாடுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, எரமநாயக்கன்பட்டி கிராமத்தில் 494 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 1770 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.05 %. இதில் 886 பேர் ஆண்கள்; 884 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 1 மட்டும் உள்ளது.[7] முக்கிய பயிர்அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
நிருவாக அமைப்பு
கிராமத்தின் தகவல்கள்
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia