சிறப்புக் குழு (இந்தியா)
சிறப்புக் குழு படைகள் (Special Group) (SG) சிறப்புப் படைக் குழுக்களில் ஒன்றாகும். இச்சிறப்புக் குழு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் கீழ் இயங்குகிறது.[3][Note 1] 1981-இல் துவக்கப்பட்ட இச்சிறப்புக் குழுவில் இந்திய இராணுவத்தின் அதிக திறமை வாய்ந்த படைவீரர்களையும், அதிகாரிகளையும் கொண்டது. இச்சிறப்புக் குழு இந்திய வான்படையின் தளங்களில் செயல்படும். அமைப்பு![]() ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் பாதுகாப்புப் பிரிவின் தலைமை இயக்குநரின் கீழ் சிறப்புக் குழு செயல்படும். [1][4] இச்சிறப்புக் குழு இந்தியப் பிரதமரின் கட்டளைகளை செயற்படுத்தும்.ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் பாதுகாப்புப் பிரிவின் செயலாளர் சிறப்புக் குழுவிற்கு பொறுப்பாவர்.[5] இதன் தலைமையகம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சர்சாவா வான்படை தளத்தில் உள்ளது. இச்சிறப்பு குழு இந்திய இராணுவத்தின் முப்படைகளில் பணிபுரியும் மிகத்திறமை வாய்ந்த வீரர்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. சிறப்புக் குழு 3 முதல் 4 கம்பெனிப் படைகளைக் கொண்டது. இப்படைப் பிரிவினர் 24 மணி நேரமும் விழிப்புணர்வுடன் செயல்படுவர். சிறப்பு குழுவில் பணி முடித்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் சொந்த படையணிகளில் சேர்ந்து கொள்ள வேண்டும். பொறுப்புகள்சிறப்புக் குழுவின் பொறுப்புகளில் இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் மற்றும் இரகசிய நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். இக்குழுவிடம் இந்திய அரசு வெளிப்படையாக தொடர்பு கொள்ள விரும்பக்கூடாது. பிற சிறப்புப் படைகளுக்கான தந்திரோபாயங்கள் மற்றும் பயிற்சி நடைமுறைகளை வளர்ப்பதற்கும் சிறப்பு குழு படைகள் பொறுப்பேற்கிறது. பயிற்சி மற்றும் உபகரணங்கள்சிறப்புக் குழு படை, இந்தியாவின் மிகவும் திறமையான பயிற்சி பெற்ற சிறப்புப் படைகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. சிறப்புக் குழு படைகள் இந்திய வான்படையின் அதிநவீன போர் விமானங்களைப் பயன்படுத்துகிறது. இதனையும் காண்கஅடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia