செமாக் பெரி மக்கள்
செமாக் பெரி அல்லது செமாக் பெரி மக்கள் (ஆங்கிலம்: Semaq Beri People; மலாய்: Orang Mah Meri; Semaq Bri; Semoq Beri) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் ஒராங் அஸ்லி இனக்குழுவில் செனோய் மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகும். செமாக் பெரி மக்கள் என்பவர்கள் செமாக் பெரி மொழியைப் பேசுகிறார்கள். செமாக் பெரி மொழி என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் (Austroasiatic Languages) பெரும் மொழிக் குடும்பத்தில்; அசிலியான் மொழிகள் (Aslian Languages) துணைக் குடுமபத்தின்; செனோய மொழிகள் (Semelaic Languages) பிரிவில் ஒரு மொழியாகும்.[2] செமாக் பெரி மக்கள் பகாங், திராங்கானு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள்.[3] சமயம்செமாக் பெரி மக்களின் சமய அமைப்பு, மற்ற ஒராங் அஸ்லி குழுக்களைப் போலவே உள்ளது. குரங்குகள், நாய்கள், பூனைகள், நில அட்டைகள், முள்ளம்பன்றிகள், இரண்டு வகையான பறவைகள் மற்றும் மூன்று வகையான பாம்புகள் போன்றவற்றைக் கிண்டல் செய்வது அல்லது அவற்றைப் பார்த்துச் சிரிப்பது போன்ற செயல்கள் மனிதர்களுக்கு அவலங்களை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள். அவ்வாறான செயல்கள் செமாக் பெரி மக்களின் சமய அமைப்பில் தடைசெய்யப்பட்டுள்ளன. அவற்றை தாலோன் (Talon) என்கிறார்கள். தாலோன் செய்வதன் மூலம், அது ஒரு பிரபஞ்சப் பேரழிவை ஏற்படுத்தும் என்று செமாக் பெரி மக்கள் நம்புகிறார்கள். வானத்திலிருந்து பாரிய நீர் மோதும்; மற்றும் புவிக்கு அடியில் இருந்து புவி விழுங்கப்படும் என்றும் நம்புகிறார்கள்.[9] அண்மைய காலத்தில், மலேசிய அரசாங்கத்தின் முயற்சிகளினால், பல்வேறு சீரமைப்புத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில், இசுலாமிய மயமாக்கப்பட்ட சில செமாக் பெரி சமூகங்களும் உருவாகியுள்ள்ன.[10] செமாக் பெரி மக்கள் தொகைசெமாக் பெரி மக்கள் தொகை பின்வருமாறு:-
மேலும் காண்கமேற்கோள்கள்
சான்று நூல்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia