மத்திய கால அசிரியப் பேரரசு
மத்திய கால அசிரியப் பேரரசு (Middle Assyrian Empire), பழைய அசிரியப் பேரரசுக்கும், புது அசிரியப் பேரரசுக்கும் இடைப்பட்ட காலத்தில், மத்திய கால அசிரியப் பேரரசு, தற்கால ஈராக், சிரியா மற்றும் துருக்கிப் பகுதிகளை கிமு 1392 முதல் கிமு 934 முடிய ஆண்ட அசிரியர்களின் இராச்சியம் ஆகும். இப்பேரரசு மித்தான்னிப் பேரரசிலிருந்து தன்னாட்சியுடன் ஆண்டது. இப்பேரரசின் தலைநகரங்களாக நிம்ருத் மற்றும் அசூர் நகரங்கள் இருந்தன. மத்திய கால அசிரியப் பேரரசும், விரிவாக்கமும் கிமு 1392–1056மத்திய அசிரியப் பேரரசர் முதலாம் எரிபா-அதாத் (கிமு 1392–1366), அசிரியர்கள் மீது மித்தான்னி பேரரசின் தாக்கம் அதிகம் கொண்டிருந்தது. பேரரசர் முதலாம் அசூர்-உபாலித் (கிமு 1365–1330) ஆட்சியில், மத்திய அசிரியப் பேரரசு அதிக வலுடன் விளங்கியது. இப்பேரரசின் சம காலத்தில் இருந்த மித்தானி இராச்சியத்தின் மீது , அசிரியர்கள் தென்கிழக்கிலிருந்தும், இட்டைட்டுகள் வடமேற்கிலிருந்தும் அழுத்தம் தந்ததால், மித்தானிப் பேரரசின் பலம் வீழ்ச்சி கண்டது. அசிரியா மன்னர் முதலாம் அசூர்-உபாலித், மித்தானிப் பேரரசர் இரண்டாம் சுத்தார்னாவை ஒரு போர்க்களத்தில் சூழ்ச்சி செய்து வீழ்த்தி, அசிரியாவை சக்தி மிக்க பேரரசு ஆனது. அசிரியப் பேரரசர் என்லில் நிராரி (கிமு 1329–1308) ஆட்சியில் பாபிலோனை கைப்பற்றினார். அசிரியப் பேரரசர் ஆரிக்- டென் -இலி (கிமு 1307–1296) சிரியாவைக் கைப்பற்றினார். முதலாம் அதாத் - நிராரி (கிமு 1295–1275) ஆட்சியில், நிம்ருத் நகரம் அசிரியப் பேரரசின் தலைநகரானது. மேலும் இட்டைட்டுப் பேரரசின் பகுதிகளையும், ஆசிய மைனரையும் கைப்பற்றி பேரரசை விரிவாக்கினார். அசூர் நகரத்தில் அசிரிய தெய்வஙகளுக்கான கோயில்களும், அரண்மனைகளும் கட்டப்பட்டது. முதலாம் சால்மனேசர் (கிமு 1274–1244) ஆட்சியில் கிமு 1274ல் உரார்த்துகளின் உரியன் இராச்சியத்தை கைப்பற்றினார். பின்னர் மித்தான்னிப் பேரரசையும் முழுவதுமாக வீழ்த்தினார். இட்டைட்டு பேரரசு மற்றும் எகிப்து இராச்சியத்திற்கும், அசிரியப் பேரரசு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.[1] அசிரியப் பேரரசர் முதலாம் துக்குல்தி - நினுர்தா (கிமு 1244–1207), மீண்டும் இட்டைட்டுகளையும், பாபிலோனியர்களையும் வென்றார்.[2] செப்புக் காலத்தின் அசிரியப் பேரரசின் குலைவு, கிமு 1055–934![]() செப்புக் காலத்தில் மக்கள் எழுச்சியால் கிமு 1200 - 900 கால வரையிலான பண்டைய அண்மை கிழக்கு, வட ஆப்பிரிக்கா, அனத்தோலியா, காகசஸ், பால்கன் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகள், ஆளும் வர்க்கத்தினருக்கு இருண்ட காலமாக அமைந்தது. கிமு 1056ல் அசிரியப் பேரரசர் அசூர் பெல் - காலாவின் இறப்பிற்குப் பின், அசிரியா நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தது. படிப்படியாக அசிரியப் பேரரசு சுருங்கி கிமு 1026ல் இப்பேரரசு அசிரியாவை மட்டுமே ஆட்சி செய்தது. கிமு 934ல் இப்பேரரசு வீழ்ச்சியுற்றது. ![]() ![]() மத்திய கால அசிரியப் பேரரசர்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia