இரண்டாம் டேரியஸ்
![]() ![]() இரண்டாம் டேரியஸ் (Darius II) பாரசீக அகாமனிசியப் பேரரசராக கிமு 423 முதல் 404 வரை 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.[1] மேலும் இவர் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தின் பர்வோனாகவும் ஆட்சி செய்தவர். அகாமனிசியப் பேரரசர் முதலாம் அர்தசெராக்சஸ் கிமு 424-இல் மறைவான போது இரண்டாம் அர்தசெராக்சஸ் ஆட்சி பீடம் ஏறினார். இரண்டரை மாதம் கழித்து இரன்டாம் அர்தசெராக்சை தனது சகோதரர் சோக்டியானசை கொன்று அகாமனிசியப் பேரரசரசின் ஆட்சி பீடம் ஏறினார்.[2] பின்னர் சோக்டியானசை வீழ்த்திய இரண்டாம் டேரியஸ் கிமு 423-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசராக முடிசூட்டிக் கொண்டார். ![]() வரலாற்றாளர்கள் இரண்டாம் டேரியசின் ஆட்சிக் காலம் குறித்து சிறிதளவே அறிந்து வைத்துள்ளனர். மெசொப்பொத்தேமியாவில் இருந்த மீடியர்கள் கிமு 409-இல் அகாமனிசியப் பேரரசர் இரன்டாம் டேரியசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். ஏதன்ஸ் உடன் பிணக்குஏதன்ஸ் நாட்டு கிரேக்கர்கள், இரண்டாம் டேரியசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய, கிமு 413-இல் அனத்தோலியா பகுதியில் வாழ்ந்த அமோர்ஜஸ் மக்களை தூண்டி விட்டனர். கிமு 414-இல் ஏஜியன் கடல் பரப்பில் இரண்டாம் டேரியஸ் கப்பற்படைகளை பெருக்கியதுடன், ஏதன்ஸ் படைகளுக்கு எதிராக ஸ்பார்ட்டன்களுடன் கூட்டு சேர்ந்தார். இதனால் ஏதன்ஸ் நாட்டு கிரேக்கர்கள் அதிகம் வாழந்த ஆசியா மைனரின் ஐயோனியா நகரத்தை இரண்டாம் டேரியஸ் கிமு 412-இல் கைப்பற்றினார்.[3] கிமு 404-இல் இரண்டாம் டேரியஸ் தனது ஆட்சியின் 9-ஆம் ஆண்டின் போது மறைந்த போது, அவரது மகன் இரண்டாம் அர்தசெராக்சஸ் பாரசீக அகாமனிசியப் பேரரசராக முடிசூட்டிக் கொண்டார். இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia