ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத்திற்கான தொடர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பன்னாட்டு ஒருநாள்துடுப்பாட்டத் தொடராகும். 1998 இல் தொடங்கப்பட்ட இத்தொடர் இரண்டாண்டுகளுக்கு ஒரு தடவை வெளியேற்றநிலை வெற்றிக்கிண்ணம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்தது. 2002 இல் இதன் பெயர் ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் என மாற்றப்பட்டது, 2009 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படுகின்றது. 2017 போட்டிக்குப் பிறகு வாகையாளர் வெற்றிக்கிண்ணத் தொடர் நடத்தப்பட மாட்டாது என ஐசிசி 2016 இல் அறிவித்தது. பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் மூன்று வடிவங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு போட்டியை நடத்த ஐசிசி இலக்கு வைத்தது.[3] ஆனாலும், நவம்பர் 2021 இல், இத்தொடர் போட்டி 2025 இல் நடைபெறும் என்று அறிவித்தது.[4]
நடத்தும் நாடு தெரிவு
2021 நவம்பர் 16 அன்று, 2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத் தொடரை பாக்கித்தான் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.[4] 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி மீதான தாக்குதலுக்குப் பிறகு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு,[5] பாக்கித்தானில் நடத்தப்படும் முதல் உலகளாவிய போட்டி இதுவாகும்.[6] பாக்கித்தான் கடைசியாக 1996 உலகக்கிண்ணப் போட்டிகளை இந்தியாவுடனும்இலங்கையுடனும் இணைந்து நடத்தியது.[7] இந்தியா பாக்கித்தானில் விளையாட மறுத்ததால் ஐக்கிய அரபு அமீரகம் இணை நடத்துநராக அறிவிக்கப்பட்டது. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டுமே அமீரகத்தில் நடைபெற்றன.[8][9]
வடிவம்
தகுதி பெற்ற எட்டு அணிகள் நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்தக் குழுவில் உள்ள மூன்று அணிகளுடன் - மொத்தம் பன்னிரண்டு போட்டிகளாக - குழுநிலையில் விளையாடின, மேலும் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் ஒற்றை வெளியேற்ற நிலைக்கு முன்னேறின. வெளியேற்ற நிலையில் 2 அரையிறுதிப் போட்டிகளும் ஒரு இறுதிப் போட்டியும் விளையாடப்பட்டன. மொத்தம் 15 போட்டிகள் 19 நாட்களில் நடைபெற்றன.[8]
தகுதி
புரவலர்களாக, பாக்கித்தான் தானாகவே போட்டிக்குத் தகுதி பெற்றது. இத்தொடருக்கு முந்தைய 2023 உலகக்கிண்ணத்தில் ஏனைய ஏழு உயர் தர-வரிசை அணிகளும் பாக்கித்தானுடன் இணைந்தன.[10][11]
மூலம்: இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ[15] வகைப்பாட்டிற்கான விதிகள்: 1) புள்ளிகள்; 2) வெற்றிகள்; 3) நிகர ஓட்ட விகிதம்; 4) சமநிலையில் உள்ள அணிகளுக்கு இடையிலான ஆட்டங்களின் முடிவுகள்; 5) தொடக்கக் குழு நிலைகள்[16] (H) நடத்தும் நாடு
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
ரவீந்திர ஜடேஜா (இந்) தனது 200-ஆவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[17]
முகம்மது சமி (இந்) தனது 200-ஆவது பன்னாட்டு ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார். ஒருநாள் போட்டிகளில் வேகமாக 200 இலக்குகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.[18]
ரோகித் சர்மா (இந்) தனது 11,000 ஒருநாள் ஓட்டங்களைக்ப் பெற்றார்.[19]
மூலம்: இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ[15] வகைப்பாட்டிற்கான விதிகள்: 1) புள்ளிகள்; 2) வெற்றிகள்; 3) நிகர ஓட்ட விகிதம்; 4) சமநிலையில் உள்ள அணிகளுக்கு இடையிலான ஆட்டங்களின் முடிவுகள்; 5) தொடக்கக் குழு நிலைகள்[16]
தென்னாப்பிரிக்கா 107 ஓட்டங்களால் வெற்றி தேசிய விளையாட்டரங்கு, கராச்சி நடுவர்கள்: சரஃபுதுல்லா (வங்), அலெக்ஸ் வார்ப் (இங்) ஆட்ட நாயகன்: ராயன் ரிக்கெல்டன் (தெஆ)
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இது ஆப்கானித்தான் விளயாடும் முதலாவது வாகையாளர் வெற்றிக்கிண்ணப் போட்டியாகும்.
ராயன் ரிக்கெல்டன் (தெஆ) தனது முதலாவது ஒருநாள் சதத்தைப் பெற்றார்.[27]