புது பாபிலோனியப் பேரரசு
![]() ![]() ![]() ![]() ![]() புது பாபிலோனியப் பேரரசு (Neo-Babylonian Empire) (இரண்டாம் பாபிலோனியப் பேரரசு) என்றும் அழைப்பர்), மெசொப்பொத்தேமியாவை மையமாகக் கொண்டு கிமு 626 முதல் 539 முடிய[1] 87 ஆண்டுகள், தற்கால ஈராக், சிரியா, துருக்கி போன்ற வளமான பிரதேசங்களை ஆட்சி செய்த பாபிலோனின் 11வது வம்சத்தினரான சால்டியர்கள் ஆவார். இவர்களில் புகழ் பெற்றவர் பாபிலோனின் தொங்கு தோட்டத்தை அமைத்த இரண்டாம் நெபுகாத்நேசர் ஆவார். புது பாபிலோனிய வம்சத்தவர்களுக்கு முன்னர் பாபிலோனை அக்காதியம் மற்றும் அசிரிய மக்கள் மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். புது அசிரியப் பேரரசர் அசூர்பனிபால் கிமு 627ல் இறந்த ஒராண்டு கழித்து கிமு 626ல் நடந்த அசிரிய உள்நாட்டுப் போரின் போது, பாபிலோனியாவின் 11வது வம்சத்தின் முதலாமர் நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர், மீடியர்கள், பாரசீகர்கள், சிதியர்கள் துணையுடன் பாபிலோன் மற்றும் நினிவே[2] நகரங்களைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை அமைத்தார். முதலாம் பாபிலோனிய வம்ச பேரரசர் அம்முராபி கிமு 18ம் நூற்றாண்டின் நடுவில் இறந்த பிறகு, பாபிலோன் நகரம் மீண்டும் கிமு 626ல் பாபிலோனியர்களின் தலைநகரமாயிற்று. கிமு 539ல் அகாமனிசியப் பேரரசர் சைரசு புது பாபிலோனியப் பேரரசை கைப்பற்றி அகாமனிசியப் பேரரசில் இணைத்தார். வரலாறுபழைய அசிரியப் பேரரசு (கிமு 1365–1020) மற்றும் புது அசிரியப் பேரரசு (கிமு 911–626) காலத்திலும் தொடர்ந்து அசிரியர்களின் ஆட்சியின் கீழ் பாபிலோன் இருந்ததது. புது அசிரியப் பேரரசில் கிமு 626ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பின், பாபிலோனில் வாழ்ந்த சால்டியர்கள் பாபிலோனியவைக் கைப்பற்றி ஆண்டனர். பின்னர் தற்கால வடக்கு ஈராக், குவைத், சிரியா, துருக்கி போன்ற பிரதேசங்களை கைப்பற்றி 87 ஆண்டுகள் ஆண்டனர். பழைய மரபுகளின் மறுமலர்ச்சிபுது பாபிலோனியப் பேரரசில் கிமு 639 முதல் பபிலோனியா தன்னாட்சியுடன் ஆண்ட போது, சுமேரிய-அக்காடிய பண்பாட்டுகளின் படி கோயில்களை கட்டினர். அரமேயம் மொழி மக்களின் பேச்சு மொழியானது. அக்காதியம் ஆட்சி மொழியானது. அக்காடியர்களின் ஆப்பெழுத்து முறை சீரமைக்கப்பட்டடது. அக்காடிய வழக்கப்படி, அரசகுடும்பப் பெண் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டார். பண்பாட்டு மற்றும் பொருளாதார வாழ்க்கைமெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த புதுப் பாபிலோனியப் பேரரசில் யூப்ரடீஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகள் பாய்வதால், வேளாண்மைத் தொழில் செழித்தது. வேளாண் நிலங்களுக்கு ஆற்று நீர் பாய்வதற்கு வசதியாக கால்வாய்கள், வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் அமைத்தனர். பாபிலோனியர்களின் நகரங்களான பாபிலோன் மற்றும் நினிவே தன்னாட்சியுடன் நிர்வகிக்கப்பட்டது. கோயிலை மையப்படுத்தி நகரங்கள் இருந்தது. நீதிமன்றங்களில் வழக்குகள் உடனடியாக விசாரித்து தீர்ப்புகள் அறிவித்தனர். புது பாபிலோனியப் பேரரசர்கள்புது பாபிலோனியப் பேரரசர்கள் (பாபிலோனின் 11வது சால்டிய வம்சத்தினர்)
பாபிலோனியாவின் வீழ்ச்சி87 ஆண்டுகள் ஆண்ட புது பாபிலோனியப் பேரரசை, கிமு 539ல் நடைபெற்ற ஓபிஸ் போரில் அகாமனிசியப் பேரரசர் சைரசு கைப்பற்றி தனது பேரரசில் இணைத்துக் கொண்டார். அகாமனிசியப் பேரரசில், புது பாபிலோனியப் பேரரசும், அசிரியப் பேரரசும் சிற்றரசுகளாக விளங்கியது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia