ஒய்யார ஒளிப்படவியல்ஒய்யார ஒளிப்படவியல் அல்லது நாண்மரபு வழக்கு ஒளிப்படவியல் (Fashion photography) என்பது ஆடை மற்றும் பிற நாவீன பொருட்களை சித்தரிக்கும் ஒரு வகை ஒளிப்படமாகும். இதில் சில நேரங்களில் நவநாகரிக ஆடைகளும் அடங்கும். இது பொதுவாக ஒரு ஒய்யார ஒளிப்படக் கலைஞர் ஒரு ஒளிப்படக் கூடம் அல்லது வெளிப்புற சூழலில் உடையணிந்த வடிவழகரின் படங்களை எடுப்பதைக் கொண்டுள்ளது. இது உடை மற்றும் ஒய்யார தொழில்களில் இருந்து உருவானது, மேலும் சில ஒய்யார ஒளிப்படம் எடுத்தல் கலையாக உயர்த்தப்பட்டிருந்தாலும், இது இன்னும் முதன்மையாக ஆடை, வாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்களுக்கு வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] ஒய்யார ஒளிப்படவியல் பெரும்பாலும் விளம்பரங்களுக்காகவோ அல்லது வோக், வேனிட்டி பேர் மற்றும் எல்லே போன்ற ஒய்யார பத்திரிகைகளுக்காகவோ நடத்தப்படுகிறது. ஒய்யார வடிவமைப்பாளர்கள் தங்கள் படைப்புகளை விளம்பரப்படுத்த இது ஒரு அவசியமான வழியாக மாறிவிட்டது. ஒய்யார புகைப்படம் எடுத்தல் அதன் சொந்த அழகியலை உருவாக்கியுள்ளது, இதில் ஆடைகள் மற்றும் ஒய்யாரங்கள் கவர்ச்சியான இடங்கள் அல்லது ஆபரணங்களின் இருப்பால் மேம்படுத்தப்படுகின்றன.[2] காட்சிக்கூடம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia