மெய்நிகர் மெய்ம்மை (ஒளிப்படவியல்)![]() (360° ஊடாடும் அகலப்பரப்பு காட்சியாகக் காண்க) மெய்நிகர் மெய்ம்மை ஒளிப்படவியல் (VR photography அல்லது virtual-reality photography) என்பது அகலப்பரப்பு காட்சி ஒளிப்படங்களின் ஊடாடும் பார்வை ஆகும், இது பொதுவாக 360 பாகை வட்டம் அல்லது கோளக் காட்சியை உள்ளடக்கியது.[1] இதன் முடிவுகள், "மெய்நிகர் மெய்ம்மை ஒளிப்படம்", "360 பாகை ஒளிப்படம்", "ஒளிப்படக் கோளம்" அல்லது "கோள ஒளிப்படம்" எனப்படுகிறது.[2] அத்துடன் "ஊடாடும் அகலப்பரப்பு காட்சி" அல்லது "அமிழ்வு அகலப்பரப்பு காட்சி" என்றும் அழைக்கப்படுகின்றது. மெய்நிகர் மெய்ம்மை ஒளிப்படம் எடுத்தல் என்பது, ஒரு நடுவ நிலையில் சுழலும் போது பார்க்கப்படும் ஒரு முழுமையான காட்சியை ஒற்றைப் படமாகப் படம்பிடிக்கும் அல்லது உருவாக்கும் கலையாகும். பொதுவாக பல வரிசை 360 பாகையின் சுழற்சியில் எடுக்கப்பட்ட பல ஒளிப்படங்களை ஒன்றாக இணைப்பதன் மூலமோ அல்லது சர்வ திசை ஒளிப்படக்கருவியைப் பயன்படுத்துவதன் மூலமோ உருவாக்கப்படும் முழுமையான தோற்ற மெய்ம்மை படிமம் என்பது முற்றிலும் கணினியால் உருவாக்கப்பட்ட விளைவாகவோ அல்லது ஒளிப்படம் எடுத்தல் மற்றும் கணினியால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கலவையாகவோ இருக்கலாம். மெய்நிகர் மெய்ம்மை ஒளிப்படம் எடுத்தலின் வரலாறு என்பது மனித-கணினி தொடர்பு ஆகும், இதில் ஒரு உண்மையான அல்லது கற்பனை சூழல் உருவகப்படுத்தப்பட்டு பயனர்கள் அந்த உலகத்துடன் தொடர்பு கொண்டு கையாளப்படுகிறார்கள்.[3] இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia