கோத்தா கினபாலு மாநகராட்சி
கோத்தா கினபாலு மாநகராட்சி (மலாய்: Dewan Bandaraya Kota Kinabalu; ஆங்கிலம்: Kota Kinabalu City Hall); (சுருக்கம்: DBKK) என்பது மலேசியா, சபா, மாநிலத்தில் கோத்தா கினபாலு மாநகரத்தையும்; கோத்தா கினபாலு மாவட்டத்தையும் நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். மலேசியாவின் சபா மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த மாநகராட்சி செயல்படுகிறது. 2000 பிப்ரவரி 2-ஆம் தேதி கோத்தா கினபாலு நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்ட பிறகு இந்த மாநகராட்சி நிறுவப்பட்டது. இதன் அதிகார வரம்பு 351 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது. பொதுமாநகராட்சி முதல்வரும்; மற்றும் 24 மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்ற சபா மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாநகராட்சியின் நோக்கம்; கோத்தா கினபாலு மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[1]. வரலாறு1881-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் (British North Borneo Company (BNBC) தொடக்கக் காலத்தில் இருந்து ஜெசல்டன் (Jesselton) நகரத்தின் வரலாறு தொடங்குகிறது. ஜெசல்டன் என்பது கோத்தா கினபாலு மாநகரத்தின் பழைய காலனித்துவப் பெயராகும்.[2] 1946 சூன் 26-ஆம் தேதி பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. 15 ஜூலை 1946 முதல் 16 செப்டம்பர் 1963 வரையில், மலேசியா உருவாகும் வரையில் சபா மாநிலம், வடக்கு போர்னியோ பிரித்தானிய முடியாட்சியின் நிலப்பகுதியாக இருந்தது.[3] கோத்தா கினபாலு நகராட்சி1963-ஆம் ஆண்டு மலேசியா கூட்டமைப்பில் (Federation of Malaysia) இணையும் வரையில் கோத்தா கினபாலு நகரம் ஜெசல்டன் நகரம் என்றே அழைக்கப்பட்டது. 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெசல்டன் என்பது கோத்தா கினபாலு என மாறியது.[4] பின்னர் நகர நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டு கோத்தா கினபாலு நகராட்சி என்று அழைக்கப்பட்டது. 2000 பிப்ரவரி 2-ஆம் தேதி கோத்தா கினபாலு நகரம், மாநகரம் எனும் தகுதியைப் பெற்றது. அதன் பிறகு ஒரு மாநகராட்சி மன்றம் நிறுவப்பட்டது. தற்சமயம் கோத்தா கினபாலு மாநகரம், கோத்தா கினபாலு மாநகராட்சி (மலாய்: Dewan Bandaraya Kota Kinabalu; ஆங்கிலம்: Kota Kinabalu City Hall); (சுருக்கம்: DBKK) எனும் மாநகராட்சியால் நிர்வகிக்கப் படுகிறது. நிர்வாகப் பகுதிகள்
பிரித்தானிய போர்னியோ1941 முதல் 1945 வரை சரவாக்கில் ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு (Japanese occupation of British Borneo); அப்போது கோத்தா கினபாலு நகராட்சிக் கழகத்தின் செயல்பாடுகள் தடைபட்டன. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (ஆங்கிலம்: British North Borneo Company (BNBC) என்பது வடக்கு போர்னியோ எனும் சபா மாநிலத்தின் வளங்களை நிர்வகிப்பதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பிரித்தானிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1881 நவம்பர் 1-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. 1882-ஆம் ஆண்டில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு, சபாவை ஆட்சி செய்வதற்கான உரிமை கிடைத்தது.[5] மிரி மாநகராட்சி முதல்வர்கள்
மேற்கோள்கள்
5°58′54.0″N 116°4′32.0″E / 5.981667°N 116.075556°E வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia