7 திசம்பர் 1978-இல், மலேசியஉள்ளாட்சி சட்டத்தின் 71-இன் கீழ் தொடங்கப்பட்டது. சிலாங்கூரின் தலைநகராக சா ஆலாம் அறிவிக்கப்பட்ட அதே காலக்கட்டத்தில் தான், சா ஆலாம் மாநகராட்சியின் தோற்றமும் அறிவிக்கப்பட்டது.[4]
இதன் தலைமையகம் சிலாங்கூர், சா ஆலாம், பெர்சியாரன் பெர்பண்டாரான் (Persiaran Perbandaran, Shah Alam) சாலையில் அமைந்துள்ளது.[4]
1963-ஆம் ஆண்டில் சா ஆலாம் ஒரு நகரமாக உருவாக்கப்பட்டபோது, சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (Selangor State Development Corporation) (PKNS) கீழ் சா ஆலாம் நகர வாரியம் (Shah Alam Town Board) நிறுவப்பட்டது. 7 டிசம்பர் 1978-இல் சா ஆலாம் நகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சா ஆலாம் நகர வாரியம்; சா ஆலாம் நகராட்சி மன்றம் (Shah Alam Municipal Council) என தகுதி உயர்த்தப்பட்டது.
சா ஆலாம் நகராட்சி மன்றத் தலைவராக சிலாங்கூர் மாநிலத்தின் மாநிலச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1 சனவரி 1979-இல், சா ஆலாம் நகராட்சி மன்றம் 123 பணியாளர்களுடன் சா ஆலாம் பிரிவு 3-இல் உள்ள ஒரு கடைமனையியில் செயல்படத் தொடங்கியது. பின்னர் 1981-இல் பிரிவு சா ஆலாம் பிரிவு 14-இல் உள்ள நகராட்சி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1988-இல், அதன் சொந்த 28 மாடிக் கட்டிடத்திற்கு மாறிச் சென்றது.[6]