நான்காம் அர்சினோ
நான்காம் அர்சினோ (Arsinoë IV), எலனியக் காலத்தில் பண்டைய எகிப்தை ஆண்ட தாலமி வம்சத்தின் இராணி ஆவார். நான்காம் அர்சினோ தாலமி மன்னர் பனிரெண்டாம் தாலமியின் 6 குழந்தைகளில் நான்காவது குழந்தையும், இளைய மகளும் ஆவார்.[1][2][3] எகிப்தில் நிலவிய உள்நாட்டுப் போரினால் ஏழாம் கிளியோபாற்றா, எகிப்தை விட்டு வெளியேறிதால், எகிப்திய பார்வோன் பதிமூன்றாம் தாலமி தனது மற்றொரு சகோதரியும், மனைவியுமான நான்காம் அர்சினோவுடன் எகிப்தை கிமு 48 – 47 முடிய ஆண்டார். வடக்கு எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியாவை, கிமு 47ல் ஏழாம் கிளியோபாற்றா உதவியுடன், உரோமைப் பேரரசர் ஜுலியஸ் சீசர் தலைமையிலான கிரேக்கப் படைகள் முற்றுகை இட்ட போது, நான்காம் அர்சினோ போர்க் கைதியாக பிடிக்கப்படடு, உரோம் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் நான்காம் அர்சினோ தற்கால துருக்கியின் எபேசஸ் நகரத்திற்கு நாடு கடத்தப்பட்டார். இவரது கல்லறை எபேசஸ் நகரத்தில் உள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia