எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்
![]() ![]()
பொதுவாக எகிப்தின் துவக்க கால அரச மரபுகளை, எகிப்தின் முதல் வம்சம் என்றும் எகிப்தின் இரண்டாம் வம்சம் எனப்பிரிப்பர். கிமு 2686ல் பழைய எகிப்து இராச்சியம் தோன்றிய பின் இத்துவக்க கால எகிப்திய அரச மரபுகள் முற்றிலும் மறைந்து போனது.[3] ஒருங்கிணைந்த எகிப்தினை ஆண்ட முதல் அரச வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் தலைநகரம் தினீஸ் நகரத்திலிருந்து மெம்பிசுக்கு மாற்றப்பட்டது. எகிப்தின் துவக்க கால அரச மரபுகளின் ஆட்சியின் போது, எகிப்திய நாகரீகம், பண்பாடு, சமயம், கட்டிடக் கலைகள் வளர்ச்சியுற்றது. பண்டைய எகிப்திய துவக்க கால அரச மரபு மன்னர்கள் மைய அரசமைப்பை நிறுவி, மாகாணங்களில் அரச குடும்பத்தினரை ஆளுநர்களாக நியமித்தனர். எகிப்தின் மைய அரசின் கட்டிடங்கள் மரத்தால் அல்லது மணற்கற்களால் ஆன திறந்தவெளி கோயில்களாகக் கட்டினர். இவ்வரச மரபுகளுக்கு முன்னிருந்த பட எழுத்துகள் மூலம், அம்மக்களின் பேச்சு மொழி ஒரளவே தெரிய வருகிறது. பண்பாட்டுத் தோற்றம்கிமு 3600-க்கு முன்னர் கற்காலத்தில், எகிப்திய சமூகங்கள் நைல் ஆற்றின் இரு கரைகளிலே குடியிருப்புகள் அமைத்து, வீட்டு விலங்குகள் வளர்த்தும் வேளாண்மை செய்தும் வாழ்ந்தனர். [4] கிமு 3600-க்கு பின்னர் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்த எகிப்திய சமூகம் பண்படைந்த நாகரீகத்தை நோக்கி வேகமாக முன்னேறியது.[5] பண்டைய அண்மை கிழக்கின் தெற்கு லெவண்ட் பகுதிகளில் புழங்கிய கலைநயமிக்க அழகிய மட்பாண்டங்கள் போன்று எகிப்திலும் தயாரிக்கப்பட்டது. இக்காலத்தில் செப்புப் பாத்திரங்களின் பயன்பாடு மக்களிடையே பரவலாக இருந்தது. [5] துவக்க கால எகிப்திய அரச மரபுகளின் ஆட்சிக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவில் கையாண்ட கட்டிடக்கலை முறைகளை எகிப்தில் புகுத்தினர்.[5] தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டிருந்த நைல் அற்றின் வடிநிலப் பகுதியான கீழ் எகிப்தியர்களும், நைல் ஆறு தோன்றும் மேல் எகிப்திய மக்களிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டது. [5] மேல் எகிப்தின் மனன்ர் நார்மேர், நைல் ஆற்றின் வடிநிலப் பகுதியான கீழ் எகிப்தியர்களை வென்று இரண்டு பகுதிகளை ஒருங்கிணைத்தார்.[6] எகிப்திய இராச்சியத்தில், கடவுளின் நேரடி பிரதிநிதியான, தெய்வத்தன்மை பொருந்திய மன்னர்களே கடவுளின் தலைமைப் பூசாரியாக அடுத்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு தொடந்தனர்.[7] மறைந்த அரச குடும்பத்தினர்களின் உடலை அடக்கம் செய்து அதன் மீது எழுப்பும் பிரமிடுகளுக்கு முன்னோடியாக, துவக்க கால எகிப்திய அரச மரபுகளின் ஆட்சியில், இறந்த அரச குடும்பத்தினரின் உடல்களை, மஸ்தபா (mastaba) எனும் நித்திய வீட்டை எழுப்பி, அதில் புதைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர். இவர்களது ஆட்சிக் காலத்தில் எகிப்தில் எழுத்துக் கலை மேலும் வளர்ந்தது.
முதல் பார்வோன்தற்கால எகிப்தில் உள்ள துவக்க கால அரச மரபுகளின் முக்கிய நகரங்கள் (clickable map) மேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் ஒருங்கிணைத்த, எகிப்தின் முதல் வம்சத்தின் முதல் மன்னர் நார்மெர் ஆவார். நெக்ரபோலிசில்[8] கிடைத்த முத்திரைகளில் முதலாம் வம்சத்தின் ஐந்தாம் மன்னர் பாரோ டென்னின் கல்லறை கண்டெடுக்கப்பட்டுள்ளது. [9][10][11][12] முக்கிய ஆட்சியாளர்கள்
எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia