பதிநான்காம் தாலமி
பதிநான்காம் தாலமி (Ptolemy XIV Philopator[1] (பிறப்பு:கிமு 59 – இறப்பு: கிமு 44) பண்டைய எகிப்தை ஆண்ட தாலமி வம்சத்தின் இறுதிப் பார்வோன் ஆவார். இவர் பனிரெண்டாம் தாலமியின் மகனும், பதிமூன்றாம் தாலமியின் இளைய சகோதரனும், ஏழாம் கிளியோபாற்றாவின் சகோதரன் மற்றும் கணவரும் ஆவார்.இவர் சிறுவயதில் ஏழாம் கிளியோபாற்றாவை[2] இணை ஆட்சியராகக் கொண்டு, கிமு 47 முதல் கிமு 44 முடிய 3 ஆண்டுகள் எகிப்தை ஆண்டார். 13 சனவரி கிமு 47-இல் பதிமூன்றாம் தாலமியின் இறப்பிற்குப் பின்னர் பதிநான்காம் தாலமி ஏழாம் வயதில், தனது சகோதரியான ஏழாம் கிளியோபாற்றாவை மணந்து பண்டைய எகிப்தின் அரியணை ஏறினார். பதிநான்காம் தாலமி பெயரவில் மன்னராக இருப்பினும் ஆறாம் கிளியோபாட்ராவே எகிப்தின் ஆட்சியாளராக விளங்கினார்.[3][4] He was about 12 years old when he acceded to the throne.[5] இந்நிலையில் எகிப்தின் மீது படையெடுத்து வந்த ரோமானிய ஆட்சியாளர் சூலியஸ் சீசர் ஏழாம் கிளியோபாற்றாவின் அழகில் மயங்கி, அவருடன் சல்லாபித்து சிசேரியன் என்ற குழந்தையை பெற்றெடுத்தாள்.[6] கிமு 15 மார்ச் 44 அன்று ஜூலியஸ் சீசர் ரோமில் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கிமு 12 ஆகஸ்டு 30 அன்று உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ், சிசேரியனை கொல்ல ஆணையிடும் வரை, ஏழாம் கிளியோபாற்றா எகிப்தின் ஆட்சியாளராக இருந்தார்.[7][8]அகஸ்ட்டஸ் ஆனையின் படி, பதிநான்காம் தாலமி கிமு 26 சூலை 44 அன்று கொல்லப்பட்டார்.[9] இந்நிலையில் கிளியோபாட்ரா தனது இளவயது மகன் சிசேரியனை பதினைந்தாம் தாலமி எனும் பட்டத்துடன் கிமு 2 செப்டம்பர் 44 அன்று எகிப்தின் அரியணையில் அமர்த்தி, தான் எகிப்தின் காப்பாட்சியாரக இருந்தார்.[10][11] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia