வரலாற்றுக்கு முந்தைய எகிப்து![]() ![]() ![]() வரலாற்றுக்கு முந்தைய எகிப்து (prehistory of Egypt), புதிய கற்காலத்தில் கிமு 6,000 முதல் துவங்குகிறது. எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் காலம் கிமு 3150 முதல் துவங்குகிறது.[1] கிமு 6,000 முதல் கிமு 3150 வரையிலான காலத்தை எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய காலம் ஆகும். முன்னுரைஎகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை, பொதுவாக குறிப்பிட்ட இடங்களில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டு வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுப்பர். இருப்பினும் வரலாற்று முந்தைய காலத்தை வகைப்படுத்தும் அதே படிப்படியான வளர்ச்சி, முழு முன்கணிப்பு காலத்திலும் உள்ளது. மேலும் தனிப்பட்ட "பண்பாடுகள்" தனி நிறுவனங்களாக விளங்கப்படக்கூடாது. ஆனால் முழு காலத்தையும் ஆய்வு செய்ய வசதியாக பெரும்பாலும் அகநிலை பிரிவுகளாக பயன்படுத்தப்படுகின்றன. பண்டைய எகிப்தில் நைல் நதி பாயும் மேல் எகிப்தில் நடைபெற்ற பல அகழாய்வுகளில் மிகவும் தொன்மையான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளை ஆய்வு செய்கையில் எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய நிலையை அறிய முடிந்தது.[2] பழைய கற்காலம்நைல் நதி வடிநிலத்தில் 1,60,000 முதல் 6,00,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால ஆயுதங்கள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[3] பிந்தைய பழைய கற்கலம்பண்டைய எகிப்தில் பிந்தைய கற்காலம் கிமு 30,000-இல் துவங்குகிறது.[4] 1980-இல் அகழ்வாய்வில் கண்டெடுத்த நஸ்லெத் காட்டர் எலும்புக் கூடு 35,000 முதல் 30,360 ஆண்டுகளுக்கு முந்தையது எனக்கணிக்கப்பட்டுள்ளது.[5][6] ஹல்பன் மற்றும் குப்பானியன் பண்பாடு1,30,000 முதல் 10,000 ஆண்டுகள் வரை நைல் நதியின் தெற்கு எகிப்தில் உள்ள வடிநிலப் பகுதிகளின், தற்கால வடக்கு சூடான் பகுதியில் ஹல்பன் மற்றும் குப்பானியப் பண்பாடுகள் செழித்து விளங்கின.[7] இந்த நாடோடிப் பண்பாட்டு மக்கள் பெரிய மேய்ச்சல் கால்நடைகளைக் கொண்டிருந்தனர். மீன் பிடி தொழிலையும் சார்ந்து இருந்தனர். [a][9] மேலும் விலங்குகளை வேட்டையாடவும் மற்றும் தேன், கிழங்கு, மீன் போன்றவைகளைச் சேகரிப்பதற்கான தொழில்நுட்பங்களைக் கொண்டிருந்தனர். இவற்றிற்குக் கூரிய கல் ஆயுதங்களையே பயன்படுத்தினர். இம்மக்கள் பாறைகளில் ஓவியங்கள் வரைந்தனர். செபிலியன் பண்பாடுகிமு 13,000 ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய எகிப்தின் செபிலியன் பண்பாட்டு மக்கள் கோதுமை மற்றும் பார்லி பயிரிடும் முறை பற்றி அறிந்திருந்தனர். செபிலியன் பண்பாடு கிமு 10,000-இல் எகிப்திலிருந்து மறைந்தது. குடான் பண்பாடுகிமு 13,000 முதல் கிமு 9,000 வரை தெற்கு எகிப்தில் குடானியப் பண்பாடு செழித்து விளங்கியது.[10][11] குடான் பண்பாட்டு மக்கள் உணவிற்காக விலங்குகளை வேட்டையாடுதல், காட்டில் சிறுதானியங்களை சேகரித்தல் ஆகியவற்றை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனர்.[10][11] ஆனால் இவர்கள் பயிர்களை வரிசையாக நடவு செய்யும் முறை பற்றி அறிந்திருக்கவில்லை.[12] வடக்கு நூபியாவில் 20 தொல்லியல் களங்களை ஆய்வு செய்ததில் குடான் பண்பாட்டு மக்கள் சிறுதானியங்களை அரைத்து மாவாக்கி உண்டனர் என அறியமுடிகிறது.[13][14] முதன்முதலில் சூடானிய மக்கள் அரிவாளை பயன்படுத்தும் முறையையும், உண்பதற்கு முன் தானியங்களைக் கல் இயந்திரத்தில் அரைக்கும் முறையையும், உண்பதற்கு முன் உணவைச் சமைக்கும் முறையையும் அறிந்து வைத்திருந்தனர்.[4] இருப்பினும் கிமு 10,000-க்குப் பிறகு இந்த கருவிகளைப் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.[4] அரிப்பியன் பண்பாடுஅரிப்பியப் பண்பாட்டு மக்கள், எகிப்திற்கு வெளியே மத்திய தரைக் கடல் பகுதியில், அண்மை கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்த நூத்துபியப் பண்பாட்டை சார்ந்தவர்கள் ஆவார். அரிப்பிய பண்பாட்டு மக்கள் எகிப்தில் 300 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தனர். கிமு 12,000-இல் இப்பண்பாடு முடிவிற்கு வந்தது.[15][16] புதிய கற்காலம்பையூம் பண்பாடு![]() ![]() பாலைவனத்தின் தொடர்ச்சியான விரிவாக்கம் எகிப்தியர்களின் ஆரம்பகால மூதாதையர்களை நைல் நதியைச் சுற்றி நிரந்தரமாக குடியேறவும், கற்காலத்தின் போது மிகவும் நிலையான வாழ்க்கை முறையை பின்பற்றவும் கட்டாயப்படுத்தியது. கிமு 9,000 முதல் 6,000 வரையிலான காலகட்டத்தில் தொல்பொருள் சான்றுகளின் மூலம் மிகக் குறைவான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. கிமு 6000-இல், புதிய கற்கால குடியிருப்புகள் எகிப்து முழுவதும் தோன்றியது. தொல்பொருள் தரவுகளின் அடிப்படையிலான ஆய்வுகள் இந்த குடியேற்றங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் காரணம் என்று கூறுகின்றது. அண்மைக் கிழக்கின் வளமான பிறை பிரதேசத்திலிருந்து பண்டைய எகிப்து மற்றும் வட ஆபிரிக்காவில் வேளாண்மைத் தொழில் முன்னெடுக்கப்பட்டது. பையும் பண்பாட்டுக் காலத்தில் நெசவுத் தொழில் இருந்தது நிருபிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த மக்கள், பிற்கால எகிப்தியர்களைப் போலல்லாமல், தங்களின் இறந்தவர்களை அவர்களின் குடியிருப்புகளுக்கு மிக அருகில், சில சமயங்களில் உள்ளே புதைத்தனர். தொல்பொருள் தளங்கள் இந்த நேரத்தைப் பற்றி மிகக் குறைவாகவே வெளிப்படுத்துகின்றன என்றாலும், நகரம் என்பதற்கான பல எகிப்திய சொற்களின் ஆய்வு, எகிப்தியர்கள் குடியேறியதற்கான காரணங்களின் கற்பனையான பட்டியலை வழங்குகிறது. மேல் எகிப்தின் கலைச்சொற்கள் வணிகம், கால்நடைகளின் பாதுகாப்பு, வெள்ளப் புகலிடத்திற்கான உயரமான நிலம் மற்றும் தெய்வங்களுக்கான புனிதத் தலங்களைக் குறிக்கிறது. மெரிம்தி பண்பாடுகிமு 5000 முதல் கிமு 4200 வரை, நைல் நதியின் மேற்கு வடிநிலத்தின் விளிம்பில் உள்ள ஒரு பெரிய குடியேற்ற தளத்திலிருந்து மட்டுமே அறியப்பட்ட மெரிம்தி பண்பாடு வடக்கு எகிப்தில் செழித்தது. இந்த பண்பாடு பையூம் (அ) பண்பாடு மற்றும் அண்மைக் கிழக்கின் லெவண்ட் ஆகியவற்றுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளது. மக்கள் சிறிய குடிசைகளில் வாழ்ந்தனர். எளிமையான அலங்காரமற்ற மட்பாண்டங்களை தயாரித்தனர் மற்றும் கல் கருவிகளை வைத்திருந்தனர். கால்நடைகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் வளர்க்கப்பட்டது. கோதுமை, சோளம், பார்லி பயிரிடப்பட்டது. மெரிம்தி மக்கள் தங்கள் இறந்தவர்களை வாழும் பகுதிகளில் புதைத்து களிமண் சிலைகளை உருவாக்கினர். களிமண்ணால் செய்யப்பட்ட முதல் எகிப்திய உயிர்த் தலை மெரிம்டேவிலிருந்து வந்தது. எல் ஓமரி பண்பாடுஎல் ஓமரி பண்பாடு தற்கால கெய்ரோவிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய குடியேற்றத்திலிருந்து அறியப்படுகிறது. மக்கள் குடிசைகளில் வாழ்ந்ததாகத் தெரிகிறது, மட்பாண்டங்கள் அலங்கரிக்கப்படவில்லை. கல் கருவிகளில் கோடரிகள் மற்றும் அரிவாள்கள் அடங்கும். இக்காலத்தில் உலோகம் இன்னும் அறியப்படவில்லை. அவர்களின் தளங்கள் கிமு 4000 முதல் தொன்மையான காலம் வரை ஆக்கிரமிக்கப்பட்டன. மாதி பண்பாடுவடக்கு எகிப்தில் மலர்ந்த நிலவிய மாதி பண்பாடு, தெற்கு எகிப்தில் நிலவிய நக்காடா I மற்றும் II பண்பாட்டின் சமகாலத்தவையாகும்.இந்தப் பண்பாட்டின் கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் குறிக்கப்பட்டது. அது அலங்கரிக்கப்படாத மட்பாண்டங்கள் வரும்போது அதன் முன்னோடி கலாச்சாரங்களையும் பின்பற்றியது. தாமிரம் அறியப்பட்டது, மேலும் சில செப்பு உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மட்பாண்டங்கள் எளிமையானது மற்றும் அலங்கரிக்கப்படாதது மற்றும் சில வடிவங்களில் தெற்கு லெவண்டுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டிரந்தது. இறந்தவர்களை சில பொருட்களுடன் கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டனர். தஸ்சியப் பண்பாடுதஸ்சியப் பண்பாடு தெற்கு எகிப்தில் பாயும் நைல் நதியின் கிழக்குக் கரையில் கண்டெடுத்த புதைகுழிகளுக்காக இந்தப்பண்பாட்டிற்கு பெயரிடப்பட்டது. தஸ்சியன் பண்பாட்டுக் காலத்தின் துவக்கத்தில் ஆரம்பகால மட்பாண்டங்களின் மேற்புறத்தில் கருப்பு வண்ணம் கொண்டிருந்தது. சிவப்பு மற்றும் பழுப்பு மட்பாண்டங்களின் மேல் மற்றும் உட்புறத்தில் கருப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தது. இந்த மட்பாண்டங்களில் எகிப்தின் துவக்க கால அரச அரசமரபுகளின் தோற்றத்தின் குறிப்புகள் கொண்டிருந்தது. தஸ்சியப் பண்பாட்டின் மட்பாண்டங்கள் மற்றும் பதாரியப் பண்பாட்டின் மட்பாண்டங்களுக்கு இடையே சிறிய வித்தியாசம் இருப்பதால், தஸ்சியப் பண்பாடு பதாரியப் பண்பாட்டின் வரம்பில் குறிப்பிடத்தக்க அளவில் ஒன்றுடன் ஒன்று கல்ந்து உள்ளது. தஸ்சியன் காலத்திலிருந்து மேல் எகிப்து, கீழ் எகிப்தின் பண்பாட்டால் வலுவாக தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. ![]() ஏறத்தாழ கிமு 5000 முதல் கிமு 4000 வரை மேல் எகிப்தில் நிலவியது. பதாரி தொல்லியல் களத்தில் இப்பண்பாட்டிற்கான ஆதாரங்கள் கிடைத்தது. இது தஸ்சியன் பண்பாட்டைப் பின்பற்றி, அதனை ஒத்ததாக உள்ளது. பலர் இதனை ஒரு தொடர்ச்சியான காலமாக கருதுகின்றனர். பதாரியப் பணபாட்டு காலத்தில் தரமான வண்ண மேற்புற கருப்பு மட்பாண்டங்கள் தயாரித்தனர். பதாரியன் தளங்கள் கல்லுடன் கூடுதலாக தாமிரத்தைப் பயன்படுத்தினர். எனவே அவை கல்கோலிதிக் குடியிருப்புகளாக இருக்கின்றன. அதே சமயம் புதிய கற்கால தஸ்சியன் தளங்கள் இன்னும் கற்காலமாகக் கருதப்படுகின்றன. நெக்கெனிலிருந்து அபிதோஸ் நகரத்திற்கு வடக்கே நெகெனில் இருந்து அபிதோசின் வடக்கே பதாரியன் பண்பாட்டின் தொல்லியல் களங்கள் அமைந்துள்ளன. நக்காடா பண்பாடுசெப்புக் காலம் காலத்திய வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் தொல்லியல் நக்காடா பண்பாட்டுக் காலம் கிமு 4,000 முதல் கிமு 3,000 முடிய விளங்கியது. நக்காடா எனும் பண்டைய எகிப்திய நகரத்தின் பெயரால் இப்பண்பாட்டிற்கு நக்காடா பண்பாடு எனத்தொல்லியல் அறிஞர்கள் பெயரிட்டனர். நக்காடா பண்பாட்டுக் காலத்தை முதலாம் நக்காடா, இரண்டாம் நக்காடா மற்றும் மூன்றாம் நக்காடா எனப்பிரிப்பர். அமராதியன் பண்பாடு (நக்காடா I)![]() அமராத்தியப் பண்பாடு அல்லது முதல் நக்காடா காலம் கிமு 4,000 முதல் கிமு 3,500 முடிய தெற்கு எகிப்தில் விளங்கியது.[17] அம்ரா எனும் தொல்லியல் களத்தின் பெயரால் இப்பண்பாடு அமராதியன் பண்பாட்டிற்கு பெயரிட்டனர்.[18] இக்காலத்திய மட்பாண்டத்தில் மேற்பகுதி கருப்பு நிறமும், வெள்ளைக் குறுக்குக் கோடுகளும் கொண்டிருந்தது.[19] இக்காலத்தில் மேல் எகிப்திற்கும், கீழ் எகிப்திற்கிடையே வணிகம் நடைபெற்றதை புதிய அகழ்வாராய்ச்சிகள் வெளிப்பட்ட தொல் பொருட்கள் மூலம் கண்டறிப்பட்டுள்ளது. எல்-அம்ராவில் கிடைத்த கல் பாண்டம் மற்றும் செப்பு பாண்டங்கள், சினாய் அல்லது நூபியா பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.[20][20] சிறு அளவிலான களிமண் செங்கற்கள் முதன்முதலாக அமராதியன் பண்பாட்டுக் காலத்தில் பயன்பட்டது.[21] கூடுதலாக முட்டை வடிவிலான அழகியத் தட்டுகள் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. .[22][23] கெர்செக் பண்பாடு (நக்காடா II)![]() ![]() பண்டைய எகிப்தில் இரண்டாம் நக்காடா காலத்தில் கெர்செக் பண்பாடு கிமு 3,500 முதல் கிமு 3200 முடிய விளங்கியது.[17] ஜெர்செக் தொல்லியல் களத்தின் பெயரால் இப்பண்பாட்டை அழைத்தனர். இக்காலத்தில் பண்டைய எகிப்தின் பண்பாடு வளர்ச்சியுற்றது. மேலும் இக்காலத்தில் துவக்க கால அரசமரபுகளுக்கு அடித்தளமிட்டது. கெர்செக் பண்பாட்டுக் காலத்தில் (கிமு 3450 ஆண்டில் நெக்கன் தொல்லியல் களத்தில் கெபல் எல்-அராக் கத்தி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கத்தியின் கைப்பிடி யானையின் தந்ததாலும், கத்தி விண்கல்லாலும் செய்யப்பட்ட இத்தொல்பொருள், பண்டைய அண்மை கிழக்கின் உரூக் காலத்திய மெசொப்பொத்தேமியாவின் பண்பாட்டுத் தாக்கங்கள் அதிகம் கொண்டுள்ளது. தந்த கைப்பிடியில் போர் வீரர்கள், மன்னர் மற்றும் விலங்குகளின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருந்தது. இப்பண்பாட்டுக் காலத்திய மட்பாண்டங்களில் அடர் சிவப்பு நிறத்துடன், விலங்குகள், மனிதர்கள், படகுகள் உருவங்கள் வரையப்பட்டிருந்தது.[24] இப்பண்பாட்டுக் காலத்தில் வேட்டைத் தொழிலுடன், நைல் நதி கரையோரங்களில் உணவு தானியங்கள் வேளாண்மை செய்யப்பட்டது.[24][24] இக்காலத்தில் பல அறைகள் கொண்ட எகிப்திய நகரக் குடியிருப்புகள் சுட்ட களிமண் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.[24] அனைத்து கருவிகளும் செப்பு உலோகத்தில் செய்யப்பட்டிருந்தன.[24] ref name="Gardiner 391"/>பெண்கள் வெள்ளி, தங்கத்தினால் செய்யப்பட்ட அழகிய நகைகள் அணிந்தனர்.[24] தானியங்களை அரைக்கும் கருவிகள் பயன்படுத்தப்பட்டது.மெசொப்பொத்தேமியாவின் உரூக் பண்பாட்டுக் காலத்திய உருளை முத்திரைகள் எகிப்தின் தொல்லியல் அகழாய்வில் கண்டறியப்பட்டது.[25] கெபல் எல்-அராக் கத்தி (கிமு 3450-3200) ![]() நக்காடா III![]() பண்டைய எகிப்தில் மூன்றாம் நக்காடா காலம் கிமு 3200 முதல் கிமு 3000 வரை விளங்கியது.[17]கிமு 3200 முற்பகுதியில் மேல் எகிப்தை மன்னர் மன்னர் கா ஆட்சி செய்தார். பின்னர் இரண்டாம் இசுகோர்ப்பியோன் ஆட்சி செய்தார். பின்னர் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்துகளை ஒன்றிணைத்து முதல் வம்ச ஆட்சியை மன்னர் நார்மெர் நிறுவினார். இக்காலத்தை பொதுவாக எகிப்தின் ஆதி வம்ச காலத்தின் துவக்கத்துடன் ஒப்பிடப்படுகிறது. இக்காலத்தில் நைல் நதியிலிருந்து கால்வாய்கள் முலம் வயல் பகுதிகளுக்கு நீர் கொண்டு சென்றனர். மேலும் இறந்த அரச குடும்பத்தினரின் உடல்கள் கல்லறைகள் கட்டி புதைத்தனர். வயல் பகுதிகளுக்கு [28] கெய்ரோவின் நகரபுறப்பகுதியான மாடியை உறுதியான அரணாக கட்டினர்.[29] வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய எகிப்தின் காலக் கோடுகள்
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia