ஆட்செப்சுட்டு , முதலாம் தூத்மோசின் மகளும், இரண்டாம் தூத்மோசின் பட்டத்தரசியும், மூன்றாம் தூத்மோஸ்சின் பெரியம்மாவும் ஆவார்.
இராணி நெஃபர்டீட்டீ (பிறப்பு:கிமு :1370) புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்ச பார்வோன் ஆயின் மகளும், பார்வோன் அகேநாதெனின் பட்டத்து இராணியும் ஆவார்.
இறுதி எகிப்திய இராணி ஏழாம் கிளியோபாற்றா
பண்டைய எகிப்திய அரசிகள் , பண்டைய எகிப்தியப் பண்பாட்டின் படி, அரசிகளுக்கு நாடாளாத் தகுதி இல்லை எனிலும், தந்தையில்லாத தனது சிறு வயது இளவரசர்கள் பருவ வயது அடைந்து, ஆட்சி கட்டிலில் ஏறும் வரும், இளவரசனின் காப்பாட்சியராக அரசப் பணியில் ஈடுபட்டனர். மேலும் சில அரச குடும்ப பெண்கள் தந்தை, கணவர், சகோதரன் அல்லது மகனுடன் இணைந்து இணை ஆட்சியாளராக எகிப்தை ஆண்டனர். அவர்களில் சிலர்:
மெர்நெய்த் - ஆட்சி கிமு 2950 - எகிப்தின் முதல் வம்சம்
செசசத்து –(பிறப்பு: கிமு 2345 – இறப்பு:கிமு 2333) பண்டைய எகிப்தின் ஆறாம் வம்சத்தின் முதலாவது பார்வோனும் தேத்தியின் தாயாரும் ஆவார். அரச வம்சத்தின் இரு பிரிவுகளிடையே இருந்த பிளவை சீர்ப்படுத்தி தனது மகன் தேத்தியை எகிப்தின் பார்வோனாக கொண்டுவந்ததில் இவளுக்கு முக்கிய பங்கு உள்ளது[ 1] . இவளது மகனுடன் ஆரம்பிக்கும் எகிப்தின் வரலாற்றில், பழைய எகிப்திய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இப்போதைய வரலாற்றாய்வாளர்கள் வகுத்துள்ளார்கள்.
முதலாம் நெபெரு - மத்திய கால இராச்சியத்தை ஆண்ட, பதினொன்றாம் வம்சத்தின் அரசர் முதலாம் மெண்டுகொதேப்பின் பட்டத்து அரசியும், இளவரசர்கள் முதலாம் இன்டெப் மற்றும் இரண்டாம் இன்டெப் ஆகியோர்களின் தாயும் மற்றும் மூன்றாம் இன்டெப்பின் பாட்டியும் ஆவார்.
சோபெக்நெபரு - (இறப்பு:கிமு 1802) எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய எகிப்தை ஆண்ட பனிரெண்டாம் வம்சத்தின் இறுதி அரசி ஆவார். மன்னர் நான்காம் அமெனம்ஹத்த்தின் பட்டத்தரசியான சோபெக்நெபரு எகிப்தை கிமு 1806 முதல் 1802 முடிய் 4 ஆண்டுகள் மட்டுமே எகிப்தை ஆண்டார்.
அரசி அக்மோஸ்-நெபர்தாரி - புது எகிப்திய இராச்சியத்தை நிறுவி ஆண்ட 18-ஆம் வம்சத்தின் முதல் பார்வோன் முதலாம் அக்மோசின் உடன்பிறந்த சகோதரி மற்றும் மனைவியும் ஆவார். இவரது தந்தை செக்கனென்ரே தாவோ , 17-ஆம் வம்சத்தின் பார்வோன் ஆவார். இவரது கணவர் பார்வோன் முதலாம் அக்மோஸ் மறைந்த போது இவரது மகன் முதலாம் அமென்கோதேப் கைக்குழந்தையாக இருந்த எகிப்தின் காப்பாட்சியாரக இருந்தார். இவரது மகன் முதலாம் அமென்கோதேப் பருவ வயது அடையும் வரை, அக்மோஸ்-நெபர்தாரியே எகிப்தின் காப்பாட்சியாராக இருந்து எகிப்தை ஆட்சி செய்தார்.
ஆட்செப்சுட்டு - (பிறப்பு:கிமு 1507 - கிமு 1507– இறப்பு: கிமு 1458) எகிப்தின் 18 ஆம் வம்சத்தின் இராணி ஆவார்.[ 2] இவர் வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாம் பெண்ணரசி ஆவார். புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்சத்தைச் சேர்ந்த இந்த இராணி கிமு 1507 முதல் கிமு 1458 முடிய 21 ஆண்டுகள் ஆண்ட அரசி ஆவார்.[ 3] . இவர் பார்வோன் முதலாம் தூத்மோசின் மகளும், இரண்டாம் தூத்மோசின் பட்டத்தரசியும், மூன்றாம் தூத்மோஸ்சின் பெரியம்மா ஆவார்.[ 4]
அரசி நெபெர்நெப்ரதென் - கிமு 1334 - 1332
நெஃபர்டீட்டீ (பிறப்பு:கிமு 1370 - கிமு 1330) புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்ச பார்வோன் ஆயின் மகளும், பார்வோன் அகேநாதெனின் பட்டத்து இராணி (முதன்மை மனைவியும்) ஆவார்.
அக்மோஸ்-மெரிதமுன் - புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்சத்தை நிறுவிய பார்வோன் முதலாம் அக்மோஸ் - அரசி அக்மோஸ்-நெபர்தாரி இணையரின் மகளும், பார்வோன் முதலாம் அமென்கோதேப்பின் அக்காவும், மனைவியும் ஆவார்.
நெபர்தரி - (இறப்பு:கிமு 1255) புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பத்தொன்பதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் இரண்டாம் ராமேசஸ்சின் (கிமு 1279 – 1213) பட்டத்து அரசி ஆவார்.[ 5]
அரசி டூஸ்ரெத் - (இறப்பு:கிமு 1189) புது இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் இறுதி ஆட்சியாளரும், அரசியும் ஆவார். இவர் தனது கணவரும், பார்வோனுமான சிப்டா இறந்ததற்குப் பின் எகிப்தின் ஆட்சியாளரானார். இவர் தன கணவர் சிப்டாவுன் இணைந்து 6 ஆண்டுகளும், கணவர் இறந்த பிறகு இரண்டு ஆண்டுகளும் எகிப்தை ஆண்டார்.[ 6]
இரண்டாம் ஐசேத்னோபிரெட் - புது இராச்சியத்தை ஆண்ட 20ம் வம்ச மன்னர் மெர்நெப்தாவின் அரசி.
முதலாம் கிளியோபாட்ரா - (பிறப்பு:கிமு 204 - இறப்பு கிமு 176) கிரேக்க செலூக்கியப் பேரரசர் மூன்றாம் அந்தியோகசின் மூன்றாம் மகளும், பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச மன்னர் ஐந்தாம் தாலமியின் பட்டத்தரசியும், ஆறாம் தாலமி , எட்டாம் தாலமி மற்றும் இரண்டாம் கிளியோபாட்ரா அன்னையும் ஆவார்.
இரண்டாம் கிளியோபாட்ரா - இவர் தனத கணவர்களும், சகோதரர்களுமான ஆறாம் தாலமி மற்றும் எட்டாம் தாலமியுடன் இணைந்து, கிமு 164 முதல் கிமு 116 வரை எகிப்தின் இணை ஆட்சியாளராக வரை இருந்தார்.
மூன்றாம் கிளியோபாட்ரா - (ஆட்சிக் காலம் - கிமு 142—131) இந்த இராணி தனது கணவன் எட்டாம் தாலமியுடன் (கிமு 127 - 116) சேர்ந்து இணை ஆட்சியாளராக எகிப்தை ஆண்டார். பின்னர் தனது மகன்களான ஒன்பதாம் தாலமி மற்றும் பத்தாம் தாலமியுடன் சேர்ந்து (கிமு 116 - 101) எகிப்தின் இணை ஆட்சியாளராக ஆட்சி செய்தார்.
நான்காம் கிளியோபாட்ரா
ஐந்தாம் கிளியோபாட்ரா - இவர் பனிரெண்டாம் தாலமியின் சகோதரியும், இராணியும் ஆவார். இவரின் குழந்தைகள் ஏழாம் கிளியோபாற்றா , பதிமூன்றாம் தாலமி மற்றும் பதிநான்காம் தாலமி ஆவார்.
நான்காம் அர்சினோ - கிமு 65, இவர் [[ பதிமூன்றாம் தாலமியை ஏழாம் கிளியோபாற்றாவை எகிப்தை விட்டு வெளியேற்றினார். பின்னர் ஏழாம் கிளியோபாட்டராவின் தூண்டுதலின் பேரில் கிரேக்கப் படைகள் அலெக்சாந்திரியா மீது படையெடுத்து, நான்காம் அர்சினோவை வெற்றி கொண்டு, நாடு கடத்தினர்.
ஏழாம் கிளியோபாற்றா - பண்டைய எகிப்தை ஆண்ட தாலமி வம்சத்தின் இறுதி இராணி ஆவார்.[ 7] பேரழகி கிளியோபாட்ரா, கருப்பழகி என்றும் அறியப்படுகிறார். பண்டைய எகிப்தின் இறுதி அரசியான இவர் ஏழாம் கிளியோபாட்ரா என்றும் அழைக்கப்பெறுகிறார். இவருக்கும்-ரோமைப் பேரரசின் மார்க் ஆண்டனிக்கும் பிறந்தவர் சிசாரியன் ஆவார்.
மேற்கோள்கள்